india

img

71 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் தடை

நாட்டில் தொழில்நுட்ப வளர்ச் சிக்கு ஏற்ப சைபர் குற்றங்கள் மிக மோசமான அளவில் அதி கரித்து வரும் நிலையில், கடந்த நவம்பர்  மாதத்தில் மட்டும் 71 லட்சத்துக்கும் அதிக மான கணக்குகளை தடை செய்துள்ள தாக வாட்ஸ் ஆப் (WhatsApp) நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வாட்ஸ் ஆப் நிறு வனம் கூறுகையில்,”கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 8,841 பணமோசடி புகார்கள் எங்கள் நிறுவனத்தில் பதிவு  செய்யப்பட்டுள்ளன. தகவல் தொழில் நுட்ப விதிகள் 2021-ஐ மீறிய காரணத்திற் காக 71 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதில் 19,54, 000 கணக்குகள் புகார்கள் பெறுவதற்கு முன்பே கொள்கை மீறல் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளன” என கூறி யுள்ளது.

இனி கூகுள் டிரைவில் கிடையாது
வாட்ஸ் ஆப் பயனர்கள் தங்களது பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் தங்க ளது வாட்ஸ்ஆப் கணக்கு பேக்கப்பை (BACK UP) கூகுள் டிரைவில் (GOOGLE  DRIVE) பாதுகாப்பாக சேமிக்கும் வசதி உள்ளது. சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் இனி கூகுள் டிரைவில் (GOOGLE DRIVE) இலவசமாக பிரதி எடுக்க முடியாது என வாட்ஸ் ஆப் நிறு வனம் வெளியிட்டுள்ளது.