india

மோடி அரசின் பொய்கள், பொய்கள், மேலும் பல பொய்கள் சிபிஐ(எம்) மத்தியக்குழு வெளியீடு 8

சொன்னது
“உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது.  இன்னும் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் நான்காவது பெரிய அல்லது மூன்றாவது பெரிய நாடாக அது மாறும்.”
“மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டில் 5 டிரில்லியன் அல்லது 10 டிரில்லியனை எட்டும்...”
“ ‘நல்ல நாள்’, ‘அமிர்த காலம்’, ‘உன்னத பாரதம்’ ஆகியவை உருவாகும்.”
 

உண்மை நடப்பு

l    உயர்ந்த ஜிடிபி வளர்ச்சி மற்றும் பெரிய பொருளாதாரம் ஆகியவற்றால் நாட்டின் சாமானிய மக்கள் பயனடைகிறார்கள் என்று இதற்குப் பொருளல்ல. நடைமுறையில் உள்ள பணவீக்க விகிதங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், 2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.3 சத
வீதத்திலிருந்து 3 சதவீதத்திற்கும் குறைவான நிலைக்குச் செல்லும். உண்மையான சித்திரம் மேலும் மோசமாகவும் இருக்கலாம். ஏனென்றால் பணமதிப்பிழப் புக்குப் பிந்தைய காலகட்டத்தில் அமைப்புசாராதுறையின் நிலையைப் படம்பிடிக்க புதுப்பிக்கப்பட்ட குறிகாட்டிகள் எதுவும் நம்மிடம் இல்லை.

l    தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் 213 நாடுகள் / பிரதேசங்களில் இந்தியா 147 வது இடத்தில் உள்ளது. உண்மை என்னவென்றால், இந்தியா, உலகின் மிக அதிக அளவில் ஏழை மக்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.

l உலகளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை 2016 இல் 118 நாடுகளில் 97 வது இடத்தில் இருந்தது. இது 2023 இல் 125 நாடுகளில் 111 ஆக சரிந்தது.

l     52 கோடி ஜன் தன் கணக்குகள் உருவாக்கப்பட்டதாக மோடி அரசு தம்பட்டம் அடிக்கிறது. இந்த எண்ணிக்கை வயது வந்த இந்திய மக்கள் தொகையில் பாதி பேருக்கு சமம். ஜன் தன் கணக்குகளில் சராசரி இருப்பு 20.02.2024 நிலவரப்படி வெறும் ரூ.4227 மட்டுமே. 4.3 கோடி கணக்குகளில் ஜீரோ பேலன்ஸ் உள்ளது.

l 32 சதவீத மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். 44 சதவீத 
குடும்பங்கள் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்தவில்லை. 30 சதவீத குடும்பங்க
ளுக்கு முறையான சுகாதார வசதிகள் இல்லை. 41 சதவீத குடும்பங்களுக்கு போதுமான வீடுகள் இல்லை என்பதை நிதி ஆயோக் அறிக்கையே ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

l     விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதாக அரசு உறுதியளித்த போதிலும், அதை கட்டுப்படுத்த அரசாங்கம் விரும்பாததால் ஏழைகள் மேலும் மேலும் கொள்ளையடிக்கப்படுகிறார்கள். நுகர்வோர் விலைக் குறியீடு குறித்த சமீபத்திய அரசாங்க தரவுகளின்படி, ஜூன் 2014க்கும் ஜனவரி 2024க்கும் இடையில், தானியங்கள் மற்றும் பொருட்களின் விலை 54 சதவீதமும், இறைச்சி மற்றும் மீன் 73 சதவீதமும், முட்டை 77 சதவீதமும், பால் மற்றும் பொருட்கள் 53 சதவீதமும், எண்ணெய் மற்றும் கொழுப்புகள் 48 சதவீதமும், காய்கறிகள் 48 சதவீதமும் அதிகரித்துள்ளன.  பருப்பு வகைகள் மற்றும் பொருட்கள் 82 சதவீதமும், 
நறுமணப் பொருட்கள் 112 சதவீதமும் அதிகரித்துள்ளன.

l    சுகாதார செலவுகள் 71 சதவீதமும், கல்விக்கான செலவுகள் கிட்டத்தட்ட 60 சதவீதமும் அதிகரித்துள்ளன. ஒட்டுமொத்தமாக, இந்த காலகட்டத்தில் பொது விலைக் குறியீடு கிட்டத்தட்ட 60 சதவீதம் அதிகரித்துள்ளது.

l    மே 2014 முதல் பிப்ரவரி 2024 வரை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 
18 சதவீதம் குறைந்திருந்தாலும், உள்நாட்டில் பெட்ரோல் விலை 35 சதவீதமும், டீசல் விலை 62 சதவீதமும் அதிகரித்துள்ளது. ஏனென்றால் மோடி அரசு அதிக வரிகளையும், கூடுதல் தீர்வைகளையும் விதித்து இவற்றின் விலைகளை உயர்த்தி வைத்துள்ளது.

l    ஏழைகள் ஏதாவது ஒரு பொருளை வாங்கும் ஒவ்வொரு முறையும் செலுத்தும் மறைமுக வரிகள்தான் இந்தியாவின் அரசாங்க வருவாயில் மூன்றில் இரண்டு பங்கிற்கு பங்களிக்கின்றன, அதே நேரத்தில் பணக்காரர்களில் முதல் 10 சதவீதம் பேர் - தேசிய வருமானத்தில் பாதிக்கும் மேல் உள்ளவர்கள் - நேரடி வரிகளாக மூன்றில் ஒரு பங்கை மட்டுமே பங்களிக்கின்றனர்.

l    2022ஆம் ஆண்டில், இந்தியாவின் மக்கள்தொகையில் பணக்கார 10 சதவீதம் பேர் 
தேசிய வருமானத்தில் 57 சதவீதத்தை எடுத்துக் கொண்டனர், அதே நேரத்தில் ஏழையாக உள்ள 50 சதவீதம் பேர் சுமார் 13 சதவீதத்தை மட்டுமே பெற முடிந்தது என்று உலக சமத்துவமின்மை தரவுத்தளம் தெரிவித்துள்ளது.

l    செல்வத்தின் உரிமையைப் பொறுத்தவரை, பணக்கார 10 சதவீதம் பேர் நாட்டின் தனியார் செல்வத்தில் கிட்டத்தட்ட 67 சதவீதத்தை வைத்திருக்கிறார்கள், அதே நேரத்தில் நடுத்தர 40 சதவீதம் பேர் 29.5 சதவீதமும், ஏழை 50 சதவீதம் பேர் 6 சதவீதத்திற்கும் குறைவாகவும் வைத்துள்ளனர். முதல் 10 சதவீதத்தினர் கீழ்மட்ட 50 சதவீதத்தினரை விட 20 மடங்கு அதிகமாக சம்பாதிக்கின்றனர்.

l    ஒன்றிய அரசின் திட்டங்கள்/திட்டங்களுக்கான செலவினம், 2020-21 மற்றும் 2023-24 க்கு இடையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8 சதவீதத்திலிருந்து 4.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஒன்றிய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களுக்கான செலவினமும் 1.9 சதவீதத்திலிருந்து 1.6 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது.

l    கடந்த இரண்டு ஆண்டுகளில், 2022-23 மற்றும் 2023-24 இல், பிஎம்-கிசான், உணவு மானியம், வீட்டுவசதி (PM-AWAS) மற்றும் MGNREGA ஆகியவற்றின் செலவுகள் முழுமையான தொகைகளில் வெட்டுக்களை சந்தித்துள்ளன. 2023-24 ஆம் ஆண்டில் இந்த நான்கு தலைப்புகளுக்கான ஒருங்கிணைந்த செலவு (திருத்தப்பட்ட மதிப்பீடுகள்)  2021-22 ஆம் ஆண்டின் செலவினத்தை விட  24 சதவீதம் குறைவாக இருந்தது.
அரசு என்ன செய்திருக்க வேண்டும்? 

l    வளங்களைத் திரட்ட பணக்காரர்கள் மீது வரி விதித்திருக்க வேண்டும், அந்தப் பணத்தை மக்களுக்கு சிறந்த கல்வி, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு போன்றவற்றை வழங்க செலவழித்திருக்க வேண்டும். இது தொழில்துறை முதலீடுகளை ஊக்குவித்து மேலும் சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்க வேண்டும். பொது விநியோக முறையை விரிவுபடுத்துவதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப் 
படுத்தியிருக்க வேண்டும். தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அதிக நலத்திட்டங்களை உறுதி செய்திருக்க வேண்டும். மாறாக, மக்கள் மீது தாக்குதலை தொடுத்து, அவர்களின் சுமைகளையும், சுரண்டலையும் அதிகரித்து, தேசிய, சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தையும் சுரண்டலையும் அதிகரிக்க அனைத்தையும் செய்துள்ளது.
 

பொருளாதாரத்தை வலுப்படுத்துக! ஏழைகளுக்கு நிவாரணம் வழங்குக! பாஜகவைத் தோற்கடிப்போம்!