பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத்துக்கு ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் ஐந்து கேள்விகளை முன் வைத்தார். அந்த கேள்விகள்:
1. அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் மற்ற கட்சிகளை உடைப்பது, அரசாங்கங்களைக் கவிழ்ப்பது ஆகிய பிரதமர் மோடியின் அரசியல் சரி என்று நீங்கள் கருதுகிறீர்களா?
2. ஊழல் தலைவர்கள் என்று பிரதமர் மோடியால் விமர்சிக்கப்பட்ட பலர், பாஜகவில் சேர்ந்துள்ளார்கள். இத்தகைய அரசியலை நீங்கள் ஏற்கிறீர்களா?
3. பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவரான நீங்கள் தவறான செயல் களில் இருந்து பிரதமர் மோடியை தடுத்தீர்களா?
4. வயது வரம்பு விஷயத்தை கருத்தில் கொண்டு எல்.கே. அத்வானிக்கு ஓய்வு கொடுத்ததைப் போல் மோடிக்கும் ஓய்வு கொடுக்கப் படுமா?
5. பாஜகவின் தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா, சித்தாந்த வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் தற்போது கட்சிக்கு தேவையில்லை என்று கூறியபோது நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்?” என 5 கேள்விகள் எழுப்பியுள்ளார்.