india

img

பாலியல் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் மகனின் கார் மோதி 2 இளைஞர்கள் பலி

கோண்டா, மே 29- இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், மல்யுத்த வீராங்கனை களை பாலியல் வன்கொடுமை செய்து இன்று  வரை மோடி அரசின் உதவியால் சுதந்திரமாக சுற்றி திரியும் பாஜக எம்பி பிரிஜ் பூஷனின் மகன் கார் மோதி 2 இளைஞர் பலியாகி யுள்ளனர். 

உத்தரபிரதேசத்தின் கோண்டாவில் பிரிஜ்  பூஷனின் மகனும், கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதி (உ.பி) வேட்பாளருமான கரண்  பூஷன் சிங்கின் கான்வாய் வாகனம் மோதி யதில் ரெஹான் கான் (17), ஷேஜாத் கான் (20) என இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மேலும் சாலையோரம் சென்றுகொண்டிருந்த சீதா தேவி என்ற 60 வயது பெண்மணி மீதும் கான்வாய் மோதிய நிலையில், அப்பெண் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.  

உறவினர்கள் போராட்டம்
உயிரிழந்த இளைஞர்களின் உறவினர் கள் கோண்டா சாலையில் போராட்டத் தில் குதித்துள்ளனர். ஆனால் போராட்டத்தை ஒடுக்கும் முனைப்பில் உத்தரப்பிரதேச மாநில போலீசார், விபத்தை ஏற்படுத்திய காரில் கரண் பூஷன் இல்லைஎனக் கூறினர். கரண் பூஷன் சிங் இல்லாமல் கான்வாய் மட்டும் நகரை சுற்றியது ஏன்? என கேள்வி எழுப்பி தொடர்ந்து இளைஞர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.