india

img

உச்ச நீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்!

தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி உஜ்ஜால் புயான் மற்றும் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி எஸ்.வெங்கட்டநாராயண பாட்டீ ஆகிய இருவருக்கும் உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம், உச்ச நீதிமன்றத்துக்கு இரு நீதிபதிகள் உஜ்ஜால் புயான், எஸ்.வெங்கட்டநாராயண பாட்டீ ஆகியோர் பெயர்களை கடந்த ஜூலை 5-ஆம் தேதி பரிந்துரை செய்தது. தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி உஜ்ஜால் புயான் மற்றும் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி எஸ்.வெங்கட்டநாராயண பாட்டீ ஆகிய இருவருக்கும் உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ட்விட்டரில் வெளியிட்டார். இதன்மூலம், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32-ஆக அதிகரிக்க உள்ளது. 
 

;