“நாடாளுமன்றத்தில் நிகழ்ந்தது மிகப்பெரிய பாதுகாப்பு மீறல் ஆகும். இது ஒரு தீவிர மான பிரச்சனையாக உள்ள நிலையில், இந்த விவகாரத்தை பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. நாடாளுமன்றத்தில் நுழைந்தவர்களுக்கு பாஸ் கொடுத்த பாஜக எம்பி குறித்தும், மொத்தம் எத்தனை பேர் நாடாளுமன்ற விதிமீறல் தொடர்பாக சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கும் விளக்கம் கேட்கிறோம். ஆனால் விளக்கம் கேட்பவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தவறை ஏற்க அரசு தயாராக இல்லை என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
நாடாளுமன்ற பாதுகாப்புக்குழு இதுவரையிலும் மறு நியமனம் செய்யப்படவில்லை. அந்தக் குழு விற்கு இணை செயலாளர், பாதுகாப்புப் பிரிவிற் கான தலைவர் நியமிக்கப்படவில்லை. பிரதமரோ, உள்துறை அமைச்சரோ எந்தப் பதிலும் சொல்ல வில்லை. இது ஏன் என்று கேட்பது தவறா?