india

img

பிரிட்டனில் போர் விமானப் பயிற்சியில் இந்திய விமானங்கள் பங்கேற்காது  

பிரிட்டனில் நடைபெறும் கோப்ரா வாரியர் 2022 என்ற விமானப்படை கூட்டுப்பயிற்சியில் இந்தியா பங்கேற்காது என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் வட்டிங்டன் நகரில் வரும் மார்ச் மாதம் 6 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதிவரை கோப்ரா வாரியர் என்ற பெயரில் போர் விமான பயிற்சி நடைபெற உள்ளது. பல்வேறு நாடுகள் பங்குபெற இருந்த இந்த விமான பயிற்சியில், இந்தியாவும் பங்கேற்க இருந்தது. இதில் இந்தியா சார்பில் 5 தேஜாஸ் வகை போர் விமானங்கள் பங்கேற்கும் என இந்திய விமானப் படை அறிவித்திருந்தது.  

இந்நிலையில் கோப்ரா வாரியல் போர் விமான பயிற்சியில் இந்திய விமானங்கள் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில்,  கூட்டுப் பயிற்சியில் இந்தியா பங்கேற்காது என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலையடுத்து ரஷ்யா மீது பிரிட்டன் கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக பிரிட்டன் செயல்பட்டு வரும் நிலையில், பிரிட்டனில் நடைபெறும் போர் விமானப்பயிற்சியில் பங்கேற்பது ஒரு தரப்பிற்கு ஆதரவு அளிப்பது போல இருக்கும் என்பதால் இந்தியா இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

;