india

பிரிவு 370 - ரத்து செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு - முழு விபரம்

ஜம்மு- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு டிசம்பர் 11 அன்று அளித் துள்ள தீர்ப்பின் முழு விபரம் வருமாறு:

ஜம்மு - காஷ்மீரில் குடியரசுத் தலை வர் ஆட்சியின் செல்லுபடித் தன்மை குறித்து நீதிமன்றம் தீர்ப்பளிக்கத் தேவையில்லை. ஏனெனில், மனுதாரர் கள் குடியரசுத் தலைவர் ஆட்சியை எதிர்த்து வழக்கு தொடரவில்லை.

அடுத்ததாக, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 370 தற்காலிகமானதே. ஜம்மு - காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கி ணைக்கவே சட்டப்பிரிவு 370 இருந்தது. இந்தியாவில் இருந்து அதனை பிரிப்பதற்காக அல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 1 மற்றும் 370-இன் படி ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. மாநிலத்தில் நிலவும் போர் சூழல் காரணமாக ஒரு தற்காலிக ஏற்பாடாக 370 கொண்டுவரப்பட்டது. எனவே இது அரசியலமைப்பின் 21-ஆவது பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் இணைவதில் கையெழுத்திட்ட பிறகு ஜம்மு - காஷ்மீர் தனித்த இறையாண்மையைக் கொண்டிருக்கவில்லை. ஜம்மு - காஷ்மீர் இறையாண்மையைத் தக்கவைத்துக்கொள்ளும் என்று அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடப்பட வில்லை. அரசியலமைப்பிலும் இறை யாண்மை பற்றிய குறிப்பு தெளிவாக இல்லை. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வெவ்வேறு அளவு களில் சட்டமன்ற மற்றும் நிர்வாக அதிகாரம் உள்ளது. பிரிவு 371ஏ முதல் 371ஜே வரை வெவ்வேறு மாநிலங்க ளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் உள்ளன. இது சமச்சீரற்ற கூட்டாட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு. அதன்படி 370-ஆவது பிரிவு சமச்சீரற்ற கூட்டாட்சியின் அம்சமே தவிர, தனித்த இறை யாண்மை அல்ல.

குடியரசுத் தலைவர் அதிகாரம் செல்லும்!

பிரிவு 370(3)-இன் முன்வைக்கும் நிபந்தனை அடிப்படையில், ஜம்மு - காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரை இல்லாததால், 370-வது பிரிவை குடியரசுத் தலைவர் ரத்து செய்தது செல்லாது? என்று கூறமுடி யாது. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வ தற்கான அறிவிப்பை வெளியிடும் அதி காரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு.  இதற்காக அவர் சட்டப்பிரிவு 370(3)ஐ பயன்படுத்தியதில் தவறு இல்லை. குடியரசுத் தலைவர் அதிகாரத்தைப் பயன்படுத்தியது செல்லுபடியாகும். 

மாநில அரசின்  ஒப்புதல் தேவையில்லை
சட்டப்பிரிவு 370(1)(டி)-இன் கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்தி, சட்டப் பிரிவு 367 குறிப்பிடப்படும் ‘அரசியல் நிர்ணய சபை’ என்ற குறிப்பை ‘சட்ட மன்றம்’ என மாற்றும் சட்டத்திருத்தம் அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடி யாகும். அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்ட பிறகு 370 (3) ஐப் பயன்படுத்த முடியாது என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனெ னில் இது அரசியலமைப்பு ஒருங்கி ணைப்புக்கு தீங்கு விளைவிக்கும். ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய மாநில அரசின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை. சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்.

ஒருங்கிணைப்பு செயல் முறையின் உச்சமே இது!
2018 டிசம்பரில் விதிக்கப்பட்ட குடி யரசுத் தலைவர் ஆட்சியின் பிரகட னம் மற்றும் அதைத் தொடர்ந்த நீட்டிப்பு கள், ஜம்மு - காஷ்மீர் சட்டம் 2019, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதே சங்களாகப் பிரிக்கும் நடவடிக்கைகள் என 370(1(டி)-இன் கீழ் இந்திய அரசிய லமைப்பு விதிகள் முழுவதையும் குடி யரசுத் தலைவர் ஜம்மு - காஷ்மீ ருக்குப் பயன்படுத்தலாம். 70 ஆண்டு களுக்குப் பிறகு இந்திய அரசியல மைப்புச் சட்டத்தின் அனைத்து விதிக ளும் 370 (1) (டி)-ஒரே நேரத்தில் பயன்படுத்தப்பட்டது ஒருங்கிணைப்பு செயல்முறையின் உச்சமே ஆகும். 370-ஆவது பிரிவின் கீழ் சிறப்பு சூழ்நிலைகள் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்திய குடியரசுத் தலைவரின் முடிவை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது, அதேநேரம் எந்த முடிவும் நீதித்துறை மறுஆய்வு க்கு அப்பாற்பட்டது அல்ல. ஆனால் குடியரசுத் தலைவரின் முடிவை நாங்கள் சட்டப்பூர்வமாக்குகிறோம்.

குடியரசுத் தலைவரின் அதிகா ரத்தைப் பயன்படுத்துவதற்கு ஆலோ சனை மற்றும் ஒத்துழைப்புக் கொள்கையைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. 370(1)(டி) பிரிவைப் பயன்படுத்தி அரசியலமைப்பின் அனைத்து விதிகளையும் பயன்படுத்து வதற்கு மாநில அரசின் ஒப்புதல் தேவையில்லை.

யூனியன் பிரதேசங்களாக மாற்ற அரசுக்கு அதிகாரம்
மாநிலத்தில் குடியரசுத் தலை வர் ஆட்சி நடக்கும் போது, ஒன்றிய அரசு எடுக்கும் முடிவுகளை கேள்விக்கு உட்படுத்த முடியாது. ஒவ்வொன்றை யும் கேள்விக்கு உட்படுத்துவது அரசு நிர்வாகத்தை ஸ்தம்பிக்கச் செய்யும். அதேநேரம், சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தும்போது, அது நியா யமான காரணங்களைக் கொண்டி ருக்க வேண்டும். ஜம்மு - காஷ்மீரைப் பொறுத்தவரை, இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க ஒன்றிய அரசுக்கு உரிமை உள்ளது. மாநிலம் தொடர்பாக ஒன்றிய அரசு எடுக்கும் முடிவுகளை ரத்து செய்யக் கோர முடியாது. லடாக்கை யூனியன் பிரதே சமாக அறிவித்தது செல்லும். அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-க்குள் இந்திய தேர்தல் ஆணையம் ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடத்த வேண்டும். ஜம்மு காஷ்மீர் மறுசீரமை ப்பு தொடர்பான ஒன்றிய அரசின் அறிக்கையின்படி, ஜம்மு - காஷ்மீ ருக்கு ஒன்றிய அரசு விரைவில் மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும்.

இவ்வாறு அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.