india

img

ஜம்மு-காஷ்மீர் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது ஜனநாயக விரோதம்

ஜம்மு-காஷ்மீர் தொடர்பான மசோ தாக்களை நாடாளுமன்றத்தில் நிறை வேற்றுவது ஜனநாயகம், நீதித்துறை நடைமுறைகளுக்கு முற்றிலும் மாறானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் யூசுப் தாரிகாமி கூறியுள்ளார்.

இது குறித்து ஸ்ரீநகரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஜம்மு- காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா, நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டது. இந்த மசோதா தொடர்பாக மனுத் தாக்கல்  செய்துள்ள மனுதாரர்கள் மற்றும் அரசாங்கத்தின் வாதங்களைக் கேட்டுள்ள உச்ச தீர்ப்பை இன்னும் வழங்கவில்லை.

அரசியலமைப்புக்கு முரணாக  முடிவு எடுப்பது வழக்கமாகிவிட்டது 

இந்தச் சூழலில் திருத்த மசோதாக்கள் நிறை வேற்றப்பட்டிருப்பது ஜனநாயக மற்றும் நீதித்துறை நடைமுறைகளுக்கு முற்றிலும் மாறானது. ஜனநாய கத்திற்கு விரோதமாக, அரசியலமைப்பிற்கு முரணாக முடிவுகளை எடுப்பது தான் தற்போதைய ஆட்சியா ளர்களின் வழக்கமான நடைமுறையாகிவிட்டது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு ஏற்கனவே ஜம்மு - காஷ்மீர் இடஒதுக்கீடு சட்டம், 2004-ஐ இயற்றி யுள்ளது. இந்தச் சட்டம் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினருக்கு தொழில் fல்லூரிகளின் சேர்க்கையில் இடஒதுக்கீடு வழங்கு கிறது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்தம்)  மசோதா 2023, மற்றும் “நலிந்த மற்றும் தாழ்த்தப் gட்ட வகுப்பினர்” போன்ற சொற்களை “இதர பிற் gடுத்தப்பட்ட வகுப்பினர்” என்று மாற்றுவது “மொழி யியல் திருத்தம்” என்றும் அவர் கூறினார்.

அதிகார மற்றவர்களாக வைத்திருத்தல்
எல்லை நிர்ணயம், வாக்காளர் பட்டியலை சீரமைத்து மேம்படுத்துவோம் விளிம்பு நிலை மக்க ளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம் என  ஒன்றிய அரசு கூறிக்கொண்டு தான் இருக்கிறது. அதே நேரத்தில் 2018-ஆம் ஆண்டு முதல் சட்டமன்றத் தேர்தலை நடத்த மறுக்கிறது. இதன் மூலம் ஜம்மு - காஷ்மீர் மக்களை அதிகாரமற்றவர்களாக வைத்திருக்க வேண்டுமென்பதில் ஒன்றிய அரசு பிடிவாதமாக உள்ளதையே காட்டுகிறது.

நியமனம் கூடாது
காஷ்மீரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களை சட்டப் பேரவைக்கு நியமிப்பது, சொந்த இடங்களில் அவர்களை ஒருபோதும் மறுவாழ்வு பெறவைக்கக்கூடாது என்ற தற்போதைய ஆட்சியின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. 

டிபி தார், பியாரி லால் ஹிந்து, மனோகர் லால் கவுல் மற்றும் பிற சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட்டுத்தான் கடந்த காலங்களில் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், உறுப்பினர்களை பரிந்துரைக்கும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் இருக்க வேண்டும், தேர்ந்தெடுக்கப்படாத எந்த அதிகா ரிக்கும் இல்லை என்றார்.