india

img

மல்யுத்த வீரர்கள் போராட்டம் -தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கிக்கு எதிரான வழக்குகளில் ஜூன் 15-ஆம் தேதிக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என்று உறுதிமொழி அளித்திருப்பதால், அதுவரை தங்களது போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர்.

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா செய்தியாளர்களிடம் பேசுகையில், மல்யுத்த வீரர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அமைச்சர் உறுதியளித்திருப்பதாகவும் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பிரிஜ் பூஷனுக்கு எதிரான விசாரணை நடத்திமுடிக்கப்படும் என்று உறுதி அளித்திருப்பதால்,  போராட்டம் ஜூன் 15-ஆம் தேதி வரை மட்டும் நிறுத்திவைக்கப்படுவதாகவும், இந்த போராட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை என்றும் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.

;