கொரிய குடியரசிற்கு மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்திய ராணுவத் தளபதி எம்.எம்.நரவானே திங்கள்கிழமை சென்றுள் ளார்.
********************
மும்பையில் கடந்த டிசம்பர்6ஆம் தேதி சமையல் எரிவாயு உருளை வெடித்து விபத்துக்குஉள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளதாக மும்பைமாநகராட்சி தெரிவித்துள்ளது.
********************
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா மாநில முதல்வர் வீட்டின் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
********************
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
********************
இந்தியாவின் முதல் ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில் சேவையை தில்லியில் திங்களன்று பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
********************
உள்நாட்டுப் பிரச்சனைகளிலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்காகவே எல்லைக் கட்டுப்பாட்டுகோடு பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சிக்கிறது என்று ராணுவத் தளபதி குற்றம்சாட்டியுள்ளார்.
********************
ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிப்ப தற்கான காலக் கெடுவை 2021-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.