india

img

கொரோனா 3வது அலை அக்டோபா், நவம்பா் மாதங்களில் உச்சம் அடையும் என விஞ்ஞானிகள் குழு தகவல்

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா பாதிப்புகள் பற்றி முன்கூட்டியே கணிப்பதற்காக 3 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு ஒன்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.

இந்த குழு, தற்போது கோவிட் 3வது அலை குறித்து கணித்துள்ளது. அதில், நோய் எதிர்ப்பு திறன் மற்றும் தடுப்பூசியின் செயல் திறன் இழப்பு, புதிய உருமாறிய கொரோனா வகைகள் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், இக்குழுவானது தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தும் பட்சத்தில், கோவிட் 3 வது அலை மற்றும் 4 வது அலையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என தெரிவித்துள்ளது. மேலும், 3வது அலை பாதிப்பு அக்டோபா், நவம்பா் மாதங்களில் உச்சம் அடைய வாய்ப்புள்ளது எனவும், 3வது அலை பாதிப்பின்போது பெரும்பாலும் தினசரி பாதிப்பு அளவு 50,000 முதல் 1 லட்சம் என்ற அளவிலேயே இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றாவிடில் மூன்றாம் அலையின்போது தினசரி பாதிப்பு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் அளவுக்கு உயர வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

 

 

;