india

img

சீக்கியர்களையும் இந்துக்களையும் மோதவிட பாஜக சதித் திட்டம்... அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் குற்றச்சாட்டு

சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்கள் - இந்துக்கள் இடையே மோதலை ஏற்படுத்துவதற்கான சதித் திட்டத்தில் பாஜக இறங்கியிருப்பதாக, அக்கட்சியுடன் 2 மாதங்களுக்கு முன்புவரை கூட்டணியில் இருந்த சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங்பாதல் குற்றம் சாட்டியுள்ளார்.

பதிண்டா நகரில் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.“மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை ஆதரிப்பவர்கள் தேசப்பற்றாளர்கள் என்று போற்றப்படுகின்றனர். அரசை எதிர்ப்பவர்களை தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹர்ஷிம்ரத்கவுர் பாதல், அமைச்சர் பதவியைராஜினாமா செய்தார். பிரகாஷ் சிங்பாதல் தனது ‘பத்ம விபூஷண்’ விருதை திருப்பி அளித்துள்ளார். அவர்கள் இருவரும் தேசவிரோதிகளா?நாட்டின் ஒற்றுமையை பாஜக சீர்குலைத்து வருகிறது. முதலில் இந்துக்கள், முஸ்லிம்கள் இடையேமோதலை ஏற்படுத்தியது. தற்போது பஞ்சாபில் சீக்கியர்கள், இந்துக்கள் இடையே மோதலை ஏற்படுத்த அந்தக் கட்சி முயற்சி செய்து வருகிறது.புதிதாக நிறைவேற்றப்பட்ட 3 வேளாண்சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தால், தில்லியில் முகாமிட்டுள்ள விவசாயிகள் அனைவரும் பஞ்சாப்பிற்கு திரும்பி விடுவார்கள். எனவே, பாஜகஅதற்குரிய வேலைகளில் ஈடுபட்டால் நல்லது” என்று சுக்பீர் சிங் பாதல் கூறியுள்ளார்.

;