india

img

கேரள மக்களுக்கு செவ்வணக்கம்... சீத்தாராம் யெச்சூரி வாழ்த்து...

புதுதில்லி:
கேரள உள்ளாட்சி தேர்தலில் இடது ஜனநாயக முன்னணியின் மகத்தான வெற்றி குறித்து செய்தி யாளர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:

கேரள மக்களுக்கும் எல்டிஎப் ஊழியர்களுக்கும் புரட்சிகரமான செவ்வணக்கம் செலுத்துவதாக வாழ்த்து கூறினார். ஏற்கனவே 7 மாவட்டப் பஞ்சாயத்துகளை கொண்டிருந்த எல்டிஎப்புக்கு தற்போது 14இல் 11 மாவட்ட பஞ்சாயத்துகள் கிடைத்துள்ளது. இது சிபிஎம் முன்வைக்கும் இடதுசாரி மாற்றுக்கு அரசியல் ரீதியாக கிடைத்துள்ள வெற்றியாகும்.பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரமாகும் இந்த வெற்றி. அந்த அரசை சிறுமைப்படுத்த யுடிஎப்பும் பாஜகவும் மத்திய அரசை பயன்படுத்திக் கொண்டன. அதற்கு மக்கள் அளித்திருக்கும் பதிலடியாக தேர்தல் முடிவு அமைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;