india

img

லக்கிம்பூர் வன்முறைக்கு எதிர்ப்பு : அக்., 18-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் : சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு அறிவிப்பு.....

தில்லி 

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையில் 4 விவசாயிகள், 1 பத்திரிகையாளர் உட்பட 8 பேர் பலியாகியினர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் விவசாய அமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைச்சர் அஜய் மிஸ்ரா பதிவு விலகவில்லை என்றால் தசரா தினத்தன்று (அக்., 15 அன்று) பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் உருவ பொம்மை எரிக்கப்படும். மேலும் அக்., 18-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என  சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் எச்சரித்துள்ளார்.

;