tamilnadu

img

பஞ்சாப்பில் விவசாயிகள் 3 நாட்கள் ரயில் மறியல் அறிவிப்பு

அமிர்தசரஸ்:
விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு விரோதமான வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப்பில்விவசாயிகள் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர். 

நாடாளுமன்றத்தில் மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களைதாக்கல் செய்தார். விவசாயிகள் விளைபொருள் வர்த்தக மேம்பாடு மற்றும் வசதிக்கான மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதத்துக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் அதிகாரமளித்தல் மசோதா, விவசாய சேவை மசோதா ஆகியவை அந்த மூன்று மசோதாக்கள் தாக்கல்  செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்து  வருகின்றன. இந்த நிலையில், 3 வேளாண் திருத்த மசோதாக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப்பில் மூன்று நாட்கள் ரயில் மறியல் போராட்டத்திற்கு  விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.   செப்டம்பர்
24 ,25,26 ஆகிய தேதிகளில் போராட்டம் நடைபெறும் என்று விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

;