india

img

கம்யூனிஸ்டுகள், இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து புதிய படிப்பு.... ஜேஎன்யு பல்கலை மாணவர்கள், பேராசிரியர்கள் எதிர்ப்பு....

புதுதில்லி:
தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய படிப்பில், கம்யூனிஸ்டுகளையும், இஸ்லாமியர் களையும் பயங்கரவாதிகள் என்று கூறியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில், பிடெக் முடித்த மாணவர்கள், முதுகலை பொறியியலில், சர்வதேச உறவுகள் தொடர்பான படிப்புக்கு, ‘பயங்கரவாத எதிர்ப்பு, சமச்சீரற்ற மோதல்கள் மற்றும் முக்கிய சக்திகளுக்கிடையேயான ஒத்துழைப்புக் கான உத்திகள்’ (Counter Terrorism, Asymmetric Conflicts and Strategies for Cooperation amongMajor Powers) என்ற படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.அதில்தான், மத பயங்கரவாதத் தின் ஒரே வடிவம் ஜிஹாதிகள் என்றும், சீனா மற்றும் ரஷ்யாவில் ஆட்சிசெய்து வரும் கம்யூனிஸ்ட் அரசுகளே, இஸ்லாமிய நாடுகளில் உள்ளபயங்கரவாத குழுக்களுக்கு உதவி வருவதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கு பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந் துள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு (CounterTerrorism) என்ற இந்த புதிய படிப்பை அறிமுகம் செய்யும் முடிவுகடந்த ஆகஸ்ட் 17 அன்று எவ்விதவிவாதங்களும் இன்றி தன்னிச்சையாக கொண்டு வரப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகதீஷ் குமார் விவாதங்கள் இன்றிகுழுவின் கருத்தை கேட்காமல் இதனைக் கொண்டு வந்துள்ளார்.

இந்த பாடத்திட்டத்தின் 3-ஆவதுபிரிவில் இஸ்லாமியர்களின் புனிதநூலான குர்ஆன் பயங்கரவாதத்தையும், கொலைகளையும், தற்கொலைகளையும், வன்முறையையும் மதத் தின் பெயரால் புனிதப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. “இஸ்லாமிய மத போதகர்கள், இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவதன்மூலம் சமூக வலைதளங்களில் பயங்கரவாத கருத்துக்களை உலகம் முழுவதும் பரப்புகின்றனர்” என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அதேநேரம் இந்தியாவில் இந்துத்துவ வலதுசாரி குழுக்கள் பசுவுக்காக நடத்தும் படுகொலைகள் மாலேகானில் பாஜக எம்.பி. பிரக்யாசிங் தாக்குர் நடத்திய வெடிகுண்டுதாக்குதல், குஜராத் படுகொலைகள்,பாபர் மசூதி இடிப்பு, இஸ்லாமியர் கள், தலித்துகளுக்கு எதிரான கும்பல் படுகொலைகள், பத்திரிகையாளர்கள் கவுரி லங்கேஷ், தபோல்கர்,கல்புர்கி போன்றோரை கொன்ற பயங்கரவாத குழுக்கள் குறித்து எந்தகருத்தும் அந்த பாடத்தில் இடம்பெறவில்லை என்று பல்கலைக்கழக நிர்வாகம் மீது பேராசிரியர்கள் குற்றச் சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

;