india

img

எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியை மீண்டும் வழங்கிடுக...  அனைத்துக்கட்சிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்....

புதுதில்லி:
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை மீண்டும் வழங்க வேண்டும் என்று மக்களவை அனைத்துக்கட்சிகள் கூட்டத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

 ஜூலை 19 அன்று தொடங்கிய  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் மக்களவை அனைத்துக்கட்சி கூட்டம், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்றது.
அப்போது, எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியை மீண்டும் வழங்குவது தொடர்பான பிரச்சனையை மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுதீப் பண்டோபாத்யாய், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் மிதுன் ரெட்டி உள்ளிட்டோர் எழுப்பினர். அப்போது இந்த விஷயத்தை அரசிடம் தெரிவிப்பேன் என சபாநாயகர் ஓம் பிர்லா உறுதியளித்தார்.  கடந்த 5 கூட்டத்தொடர்களில் பல்வேறு கட்சி தலைவர்கள் அளித்த ஒத்துழைப்பை பாராட்டிய சபாநாயகர், அதேபோல இம்முறையும் கூட்டத்தொடர் சீராக நடைபெற உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதற்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் அவரிடம் உறுதி அளித்தனர்.

;