india

img

பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்களை ஒட்டுக்கேட்டது குறித்து விவாதம் நடத்துக... மாநிலங்களவையில் சிபிஐ நோட்டீஸ் அளித்து வலியுறுத்தல்....

புதுதில்லி:
இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் 40  பத்திரிகையாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட தாக வெளியான செய்தி குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. பினோய் விஸ்வம் சார்பில் அளிக்கப்பட்ட  மனுவில்,  விதி 267-ன் கீழ் மாநிலங்களவை அலுவல்களை ரத்து செய்துவிட்டு, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இஸ்ரேலின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் பத்திரிகையாளர் உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக செய்தி  வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸைச்சேர்ந்த லாபநோக்கமற்ற அமைப்பான ஃபர்மிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து இந்த ஒட்டுக் கேட்பைக் கண்டுபிடித்துள்ளனர்.

‘தி வயர்’ இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, “இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், நீதிபதி ஒருவர், ஒன்றிய அமைச்சரவையில் இரு அமைச்சர்கள், பாதுகாப்பு அமைப்பில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியலமைப்புச் சட்டப் பதவியில் இருப்போர் என பலருடைய செல்போன்கள் ஒட்டுக்கேட்கப் பட்டுள்ளன.இந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே, நெட்வொர்க் 18, தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய நாளேடுகளில் பணிபுரியும்பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.சர்வதேச அளவில் ஏஎஃப்பி, சிஎன்என், தி நியூயார்க் டைம்ஸ், அல் ஜசிரா ஆகிய நாளேடுகளில் பணிபுரியும் பத்திரிகையா ளர்களின் செல்போன்களும் ஒட்டுக்கேட்கப் பட்டுள்ளன.

பிரபல  பத்திரிகையாளர்களான சித்தார்த் வரதராஜன், ஷிசிர் குப்தா, பிரஷாந்த் ஜா, ராகுல் சிங், சந்தீப் உன்னிதான், மனோஜ் குப்தா, விஜய்தா சிங், கோபிகிருஷ்ணன் உள்ளிட்டோரின் செல்போன்கள் கண்காணிக்கப்பட்டுள்ளதாகப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒன்றிய மின்னணு அமைச்சகத்துறை சார்பில் கூறுகையில், “குறிப்பிட்ட யாரையும் உளவு பார்க்கவில்லை. அவர்களின் செல்போனும் ஒட்டுக் கேட்கப்படவில்லை. ஆதாரமற்ற இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறோம் என்று கூறிக்கொண்டுள்ளது.

;