ஈக்கள் உணவு என்று கருதி நீல நிறத்தை விரும்புகின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஈக்கள் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த, ஈக்களை அழிக்க செயல் திறன் உடைய பொறிகளை உருவாக்க இந்த கண்டுபிடிப்பு உதவும் என்று நம்பப்படுகிறது. கடிக்கும் இயல்புடைய ஈக்கள் நீல நிறத்தால் அதிகமாகக் கவரப்படுகின்றன. ஈக்கடியால் பரவும் தூக்கநோய் போன்ற பல நோய்களைக் கட்டுப்படுத்த இப்போதுள்ளதை விட மேம்பட்ட ஈப்பொறிகளை உருவாக்க இது உதவும் என்று கருதப்படுகிறது.
நீல நிற ஈப்பொறிகள்
இது பற்றிய கள ஆய்வுகள் இக்கருத்தை நிரூபித்துள்ளன. இதனால் தான் உலகம் முழுவதும் பொதுவாக ஈக்களைக் கொல்லும் பொறி கள் நீல நிறத்தில் தயாரிக்கப்படுகின்றன என்று ஆய்வுக்குழு தலைவ ரும் அபரிஸ்ட்வித் (Aberystwyth) பல்கலைக்கழக உயிர் அறிவியல் துறை ஆய்வாளருமான டாக்டர் ரோஜர் சாண்டர் (Dr Roger Santer) கூறு கிறார். ஆனால் ஈக்கள் நீல நிறத்தால் ஏன் கவரப்படுகின்றன என்பது விஞ்ஞானிகளுக்கு இதுவரை புரியாத புதிராக இருந்தது.
முந்தைய கோட்பாடுகள்
நீல நிறம் இருட்டானது. அங்கு சென்றால் ஓய்வெடுக்கலாம். உணவு கிடைக்கும் என்று ஈக்கள் கருதுவதால் அவை நீல நிறத்தை அதிகமாக விரும்புகின்றன என்று இதற்கு முன்பு இது பற்றி கூறப்பட்ட கோட்பாடுகள் எவை யும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை. பனி மூடப்பட்ட இடங்களில் கூட ஈக்கள் நீல நிறம் உள்ள பகுதியையே நாடிச் செல்கின்றன.
கண்களின் அமைப்பும் நீல நிறமும்
ஈயின் கண் போல இருப்பதே நீல நிறத்தில் பொறிகள் உருவாக்கப்படு வதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் இது நிரூபிக்கப்படவில்லை. ஈக்கும் நீல நிறத்திற்கும் இடையில் இருக் கும் தொடர்பைக் கண்டறிய செயற்கை நரம்பியல் வலை அமைப்புகளை விஞ்ஞானிகள் உருவாக்கினர். இந்த அமைப்புகள் செட்சி (Tsetse), ஸ்டேபிள் (stable), ஹார்ஸ் ஈ (horse fly) போன்ற வகை ஈக்களின் மூளையில் அவற்றின் இயற்கையான பார்வைத்திற னுக்கான செயல்முறையை மிமிக்ரி செய்யும்விதத்தில் உருவாக்கப்பட்டது.
மூளையின் நரம்பியல் வலை அமைப்புகள்
செயற்கை நரம்பியல் வலை அமைப்புகள் என்பவை இயந்திரக்கற் றல் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படு பவை. இவை உண்மையான நரம்பியல் வலை அமைப்புகளைப் போன்றவை. இந்த அமைப்புகள் ஈயின் மூளையில் இருக்கும் ஐந்து வகை ஒளி உணர் ஏற்பி களை (photoreceptors) மட்டும் பயன் படுத்தி இலை உள்ள இடங்கள், இருட்டு உள்ள மற்றும் இல்லாத பகுதிகளை வேறு படுத்தி அறிய பயிற்சி வழங்கப்பட்டது. பிறகு இவை நீல நிறத்தில் இருக்கும் ஈப்பொறிகளில் பரிசோதிக்கப்பட்டது.
ஈக்களின் தவறான கணிப்பு
வெளிச்சம் இல்லாததால் நீல நிற முடைய இடங்களை ஈக்கள் இருட்டா னவை என்று உணர்கின்றன. இதற்காக நீலம் மற்றும் பச்சை நிறத்தில் ஒளி உணரி களைப் பயன்படுத்தி ஆய்வுகள் நடந்தன. அப்போது நீல நிறப் பொருட்களை ஈக்கள் அவற்றிற்கு உணவு என்று தவறாகக் கணிப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று ராயல் சொசைட்டி பி (Proceedings of Royal Society B journal) என்ற ஆய்வித ழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை கூறு கிறது.
பொறியின் நிறங்கள்
நீல நிறத்தில் அமைக்கப்பட்டுள்ள பொறிகள் போன்ற பொருட்களை ஈக்கள் உணவு என்று கருதுவதை இதன் மூலம் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ள னர். வண்ண நிறங்களுடன் இருக்கும் பொறிகளால் ஈக்கள் கவரப்படுவதற்கு பின்னால் இருக்கும் செயல்முறையை அறிந்துகொண்டால் பொறிகளின் நிறத்தை நம்மால் மேம்படுத்தமுடியும். அதனால் அவை ஈக்களை மேலும் திறம் பட்டமுறையில் பிடிக்கமுடியும் என்று சாண்டர் கூறுகிறார். பல இன ஈக்கள் மனிதர்கள் மற்றும் விலங்குகளை கடிப்ப தால் பல நோய்கள் ஏற்படுகின்ற்அன.
ஈக்களைக் கட்டுப்படுத்தினால்
அதனால் ஈக்களைக் கட்டுப்படுத்து வது நோய்க்கட்டுப்பாட்டின் ஒரு முக்கிய அம்சம் என்பதால் இது பற்றிய ஆய்வு கள் மிக முக்கியமானவை. ஆப்பிரிக்கா வின் சஃப் சஹாரா பகுதியில் கொள்ளை நோயாக உள்ள மனித டிரைப்பனோ சோமியாசிஸ் (Human African trypano somiasis) என்ற தூக்க நோய் ஈக்கள் கடிப்பதால் ஏற்படுகிறது. உரிய சிகிச்சை கொடுக்கப்படாவிட்டால் இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். உலகளவில் ஸ்டேபிள் ஈக்கள் கால்நடைகளைத் தாக்கு வதால் பெரும் இழப்புகள் ஏற்படுகின்றன. இது போன்ற நோய்க்கட்டுப்பாட்டிற்கு இந்த ஆய்வு முடிவுகள் முக்கியப்பங்காற்றும்.
திருப்புமுனையான கண்டுபிடிப்பு
உணவில்லாமல் இருந்தசெட்சி ஈக் களில் நீல நிறப் பொறிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட கள ஆய்வுகள் இதை உறுதி செய்துள்ளன. பூச்சிக் கட்டுப்பாடு மற்றும் நோய் கட்டுப்பாட்டில் இந்த கண்டுபிடிப்பு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள் ளது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.