india

img

பேரறிவாளன் வழக்கில் இன்று தீர்ப்பு

பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று  காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி 36 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ள பேரறிவாளன் தன்னை விடுவிக்கக்கோரி வழக்கு தொடுத்தார்.

நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த 11-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி , பேரறிவாளன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆகியோர் வாதிட்டனர். ஒன்றிய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ் வாதிட்டார்.

அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த பிறகு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.  இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளிக்கவுள்ளது.