india

நானிலம் வாழ்வது நன்று! - கோவி.பால.முருகு

மதியாதார் வீட்டிற்குச் செல்லாதே-நீயும்
 மதித்துஅவர் வீட்டில் உண்ணாதே!
மதிப்போரை மதித்துநீ வாழ்ந்திடு!-அவர்
 மனதை அன்பாலே வென்றிடு!

பொறாமை ஆசை கோபம்-வாழ்வில்
 போற்றாத செயலே அறமாம்!
 அறவே தீச்சொல் நீக்கிடு-அதை
 அண்டாமல் நாவைக் காத்திடு!

செய்வதற்கு அரியசெயல் செய்தால் -உன்னை
 சிறப்புடன் பெரியரெனப் புகழ்வார்!
செய்வதற்கு எளியசெயல் கூட!-நீ
 செய்யாமல் இருப்பின் இகழ்வார்!

நட்பினை ஆராய்ந்து கொண்டிடு!-அவர்
 நலிவிலும் உயர்விலும் சேர்ந்திடு!
நட்பினைத் தேர்ந்ததன் பின்னே-அவரை
 நம்பாமல் இருப்பது வீணே!

பலவகை அறங்களைச் சொல்லும்-குறள்
 படித்திட உன்வாழ்க்கை வெல்லும்!
நலந்தரும் சொல்செயல் கொண்டே-நீ
      நானிலம் வாழ்வது நன்றே!