india

img

தாஜ்மகாலில் காவிக் கொடி பிடித்த இந்து ஜக்ரான் மஞ்ச் பேர்வழிகள்... மத்திய பாதுகாப்புப் படையினர் வேடிக்கை?

புதுதில்லி:
இந்து ஜக்ரான் மஞ்ச் என்ற ஆர்எஸ்எஸ் பரிவாரத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று, தாஜ்மகாலில் புகுந்து,காவிக் கொடியைப் பிடித்தபடி வீடியோஎடுத்து, அதனை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற சுற்றுலா சின்னமாகவும், கட்டடக் கலையின் அதிசயமாகவும் இருக்கும் தாஜ்மகால் மத்தியதொழிலக பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால், அந்த பாதுகாப்பையெல்லாம் மீறி உள்ளே புகுந்து, இந்துத்துவா கும்பல்காவிக் கொடியுடன் வீடியோ வெளியிட்டுள்ளது.இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தற்போது இந்து ஜக்ரான் மஞ்ச்சைசேர்ந்த கவுரவ் தல்வார், ரிஷி லவானியா, சோனு பகேல், விஷேஷ் குமார்ஆகிய நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் கவுரவ் தல்வார், இந்து ஜக்ரான் மஞ்ச் அமைப்பின் மாவட்டத் தலைவர் என தெரியவந்துள்ளது. இவ்விவகாரத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153ஏ, குற்றவியல் திருத்தச் சட்டம் பிரிவு 7 ஆகியவற்றின் கீழ் வழக்கும்பதிவு செய்யப்பட்டுள்ளது.

;