தில்லி தீ விபத்து தொடர்பாக 2 பேர் தில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான கட்டட உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேற்கு தில்லியில் உள்ள முன்ட்காவில் மூன்று அடுக்குமாடி அலுவலக கட்டடத்தில் வெள்ளிக்கிழமை அன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் முதற்கட்டமாக 27 பேர் உயிரிழந்த நிலையில், இன்று காலை மேலும் 3 பேரின் உடல்களை கைப்பற்றப்பட்டுள்ளது. 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் தில்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாக தீயணைப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து காணாமல் போன பலரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பலரை காணவில்லை என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கட்டடத்தின் உரிமையாளர்களான ஹரிஷ் கோயல் மற்றும் வருண் கோயல் ஆகியோரை கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். தலைமறைவான கட்டட உரிமையாளர் மணீஷ் லக்ரா என்பவரை தொடர்ந்து தேடும் பணியில் தில்லி காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.