india

img

4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி முன்னோட்டம்.... மத்திய அரசு தகவல்...

புதுதில்லி:
கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் நடைபெறுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

விமான நிலையங்களில் இருந்து சம்பந்தப்பட்ட மாவட்டங்கள்,  மாவட்டங்களிலிருந்து கிராமங்கள், அங்கிருந்து சுகாதார மையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி எப்படி பதப்படுத்தி குளிர்பதன கிடங்குகளில் வைக்கப்படும். அதன்பிறகு எப்படி மக்களுக்கு எந்த தேதியிலே, எந்த நேரத்திலே அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்படும் என்பதை தெரிவித்து அவர்களை அங்கே அழைத்து கொரோனா தடுப்பூசி அளிக்கப்படும் என்பது சரியான முறையிலே நடக்க வேண்டும். இதற்கு எந்தவித குழப்பமும் இதிலே இருக்கக்கூடாது என்பதற்காக அரசு இந்த ஒத்திகையை நடத்துவதாக கூறப்படுகிறது.தடுப்பூசிக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படாததால்  இந்த ஒத்திகையில் தடுப்பூசி போடுவது இருக்காது. லட்சத்தீவு தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசிக்கான பயிற்சிகள் முடிவடைந்துள்ளன.

;