india

img

போராட்டத்தை முன்னெடுப்போம்.... சிஐடியு மே தின அறைகூவல்....

4-ஆம் பகத் தொடர்ச்சி...  

தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக நாடுமுழுதும் பரவிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், மீண்டும்ஊரடங்குகள் வந்து தங்கள் வாழ்வைச் சூறையாடிவிடுமோ என்ற பயம் அவர்களின் முகத்தில் தென்படத் தொடங்கிவிட்டது. இதன்விளைவாக கோடிக்கணக்கான புலம்பெயர்தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கை மீண்டும் நொறுங்கி வீழ்ந்துவிடுமோ என்ற பயத்துடன் காணப்படுகிறார்கள். மீண்டும் ஊரடங்குகள் வந்துவிடும் என்ற பயத்துடன் இப்போதே ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மீண்டும்தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட தொழிலாளர் (விரோத) சட்டங்கள், பாஜக அரசாங்கத்தால் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பெரும் கொடைகளாகும். ‘வர்த்தகத்தை எளிமைப்படுத்துகிறோம்’ என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள இச்சட்டங்கள் மூலம் அவர்கள் தொழிலாளர்களை எவ்விதமான தடங்கலுமின்றிச் சுரண்டலாம்.ஒரு பக்கத்தில் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்கள், இதுநாள்வரையிலும் முதலாளிகள் சட்டவிரோதமாக மேற்கொண்டுவந்த நடவடிக்கைகள் அனைத்தையும் சட்டப்பூர்வமாக்கிவிட்டன. மறுபக்கத்தில் தொழிற்சங்க உரிமைகளுக்காகவும், தொழிலாளர்உரிமைகளுக்காகவும் ஒன்றுபட்டுப் போராடும் தொழிலாளர்களின் நடவடிக்கைகளை கிரிமினல் குற்றமாக்கி இருக்கின்றன. மே தினத்துடன் பின்னிப்பிணைந்த, உலகம் ஒப்புக்கொண்டுள்ள, “எட்டுமணி நேரவேலை” என்பது கூட இச்சட்டப்பிரிவுகளின் மூலம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டிருக்கிறது. இச்சட்டங்கள் அனைத்துமே தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள் அமைக்கும் உரிமையையும், கூட்டுப்பேர உரிமையையும் ஒழித்துக்கட்டுவதற்கானவையேயாகும்.   இப்புதிய தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்களை அடிமை நிலைக்குத் தள்ளுவதற்காகவே கொண்டுவரப்பட்டிருக்கின்றன, அவர்கள் இதுநாளும் போராடிப் பெற்ற  உரிமைகள் அனைத்தையும் பறித்துக்கொண்டிருக்கின்றன, முரட்டுத்தனமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான முதலாளித்துவச் சுரண்டலுக்குஎதிராக தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபட்டுப் போராட விடாமல்அவர்களைப் பலவீனப்படுத்தி, நசுக்கிட வேண்டுமென்கிற குறிக்கோளுடன் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

நாட்டின் சொத்துக்களாக விளங்கும் பொதுத்துறைநிறுவனங்கள் அனைத்தும் பாஜக-வின் கூட்டுக்களவாணிகார்ப்பரேட்டுகளுக்கு ஒப்படைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  இக்காலகட்டத்தில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வேலைகளையும், வருமானங்களையும் இழந்திருக்கிறார்கள். அவர்களின் குடும்பத்தார் பட்டினிக்கொடுமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதம் என சுருங்கி இருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் கவுதம் அதானியின் சொத்து மட்டும் இரட்டிப்பாகி இருக்கிறது. உலகப் பணக்காரர்கள் வரிசையில் 20 இடங்கள் ஏறி, உலகின் 48ஆவதுபணக்காரராகவும், இந்தியாவின் இரண்டாவது பணக்காரராகவும் உயர்ந்திருக்கிறார்.  முகேஷ் அம்பானியின் சொத்துக்கள் 24 சதவீதம்உயர்ந்திருக்கிறது. அவர், உலகின் எட்டாவது பணக்காரராகமாறி இருக்கிறார். இந்திய பில்லியனர்களின் சொத்துமதிப்புகொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் 35 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஆக்ஸ்ஃபாம்  அமைப்பு  கூறுகிறது.  

கார்ப்பரேட்டுகளுக்கு காவு கொடுப்பதா?
இந்த நிலைமைகள் அனைத்தும் ஆட்சியாளர்கள், மக்களைக் காவு கொடுத்து, அந்நிய மற்றும் இந்தியக்கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக நாட்டின் வளங்களை, கருவூலத்தை மற்றும் நிதி அமைப்புமுறையை சூறையாடுவதற்கு வசதி செய்து தரும் நோக்கத்துடன் காட்டுமிராண்டித்தனமாகக் கொள்கைகளைப் பின்பற்றிவருவதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது.ஒட்டுமொத்தத்தில், உலகம் முழுதும் உள்ள கார்ப்பரேட்டுகள் மற்றும் பெரும் வர்த்தக நிறுவனங்கள் இக்கால கட்டத்தில் தங்கள் சொத்துக்களைப் பல்கிப் பெருக்கிக் கொண்டிருக்கின்றன. அதே சமயத்தில் உலகத்தின் மொத்தஉள்நாட்டு உற்பத்தி எதிர்மறையாகத் திரும்பி இருக்கிறது.  இந்தியா உட்பட பல நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றிருக்கிறது. நாசகரமான நவீன தாராளமய முதலாளித்துவக் கொள்கைகளினால் இத்தகைய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.நம் நாட்டில் சாமானிய மக்கள் தங்கள் சேமிப்புகளைப்போட்டுவைத்திருக்கும் பொதுத்துறை வங்கிகள், பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கார்ப்பரேட் பெரும்புள்ளிகளிடம் ஒப்படைக்கப்பட இருக்கின்றன. ராணுவ உற்பத்தி, ரயில்வே, தொலைத்தொடர்பு,  சிவில் விமானப் போக்குவரத்து, துறைமுகங்கள், மின்சாரம், உருக்கு, கனிமச் சுரங்கங்கள் முதலானவையும் அந்நிய ஏகபோக முதலாளிகள் உட்பட தனியார் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கப்பட இருக்கின்றன.சுகாதாரம், கல்வி, மக்கள் நலத் திட்டங்கள் போன்றசேவைகள் உட்பட ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளும் தனியாரிடம் தாரைவார்க்கப்பட இருக்கின்றன. இவை அனைத்தும் நாட்டின் வேலைவாய்ப்பில் கடுமையான முறையில் எதிர்மறை மற்றும் நாசகர விளைவுகளை ஏற்படுத்திடும். நம் உற்பத்தித் திறன்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ (‘Make in India’)  என்ற முழக்கத்துடன் செய்யப்பட்டுக் கொண்டிருப்பதுதான்.‘நானும் ஊழலில் ஈடுபடமாட்டேன், மற்றவர்களையும் ஊழலில் ஈடுபட அனுமதிக்க மாட்டேன்’ என்று பிரதமர் கூறியவை இப்போது பிரெஞ்சு ஊடகங்கள், ரபேல் போர் விமானங்களை வாங்கியதில் இடைத்தரகர்களுக்கு கையூட்டுவழங்கப்பட்டிருக்கிறது என்று வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ள நிலையில் சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகமேசம்பந்தப்பட்டிருக்கறது.

மோடி அரசாங்கம் இவ்வாறு தொழிற்சாலைகளையும் அவற்றுடன் இணைந்த சேவைகளையும் மட்டுமல்ல, நாட்டின் வேளாண்மையையும் கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டிற்கு அகலத் திறந்துவிட்டிருக்கிறது. நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களும் நம் விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் கபளீகரம் செய்வதற்கு வசதி செய்து கொடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்டவைகளேயாகும். நம் நாட்டில்இதுநாள்வரையிலும் விவசாயம் என்பது சிறிய விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இவர்கள் அதனை கார்ப்பரேட் விவசாயமாக மாற்ற விரும்புகிறார்கள். விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டுப்படியாகக் கூடிய விலைகள், கொள்முதல் ஆகியவற்றைக் கைவிட்டுவிட்டு, அவர்களை சர்வதேச உணவுச் சந்தையின் மாறுபாடுகளுக்குத் தள்ளிவிட்டிருக்கிறார்கள். இதனால் இப்போதுநம் நாட்டில் உள்ள பொது விநியோக முறை கைவிடப்படுவதற்கு இட்டுச்செல்லும், மக்களின், குறிப்பாக ஏழை மக்களின், உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திடும்.விவசாயிகளில் பெரும்பகுதியினர் தங்கள் நிலங்களிலிருந்துவெளியேற்றப்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்வார்கள்.

பாஜக அரசாங்கத்தின் இத்தகைய நாசகர தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத, தேச விரோத கொள்கைகளுக்கு எதிராக வீரஞ்செறிந்த போராட்டத்தை உறுதியுடன் நடத்திக்கொண்டிருக்கும் தொழிலாளர்வர்க்கம், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினரையும் சிஐடியு பாராட்டி வாழ்த்துகிறது.  

விவசாயிகளின் வீரஞ்செறிந்த போர்
பாஜக அரசாங்கத்தின் இத்தகைய தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத மற்றும் தேச விரோதக் கொள்கைகளுக்கு எதிராக வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பதற்காக  தொழிலாளர் வர்க்கத்திற்கும், விவசாயிகளுக்கும் மற்றும் உழைக்கும் மக்களின் அனைத்துப்பிரிவு மக்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் சிஐடியு தெரிவித்துக் கொள்கிறது. ‘கறுப்பு வேளாண் சட்டங்களுக்கு’ எதிராக தில்லியின் எல்லைகளில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டங்கள் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடர்வதோடு மட்டுமல்லாமல், நாடு முழுதும் உள்ள அனைத்துப்பிரிவு உழைக்கும் மக்களின் ஆதரவையும் பெற்றிருக்கிறது. விவசாயிகளைப் பிளவுபடுத்தவும், தீங்கிழைக்கவும், மக்களைத் திசைதிருப்பவும் மேற்கொண்ட பல்வேறு பொய்ப்பிரச்சாரங்களாலும் போராட்டத்தைப் பலவீனப்படுத்தபாஜக அரசாங்கத்தினால் முடியவில்லை.  விவசாயிகள் தங்கள்ஒன்றுபட்ட போராட்டத்தை உறுதியுடன் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். சிஐடியு, அவர்களுடைய தைரியத்திற்கும், உறுதிக்கும் தலைவணங்குகிறது. அவர்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுதும் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து அணிதிரண்டிருக்கிறார்கள் எனக் கூறுவதில் பெருமிதம் கொள்கிறோம்.   

தொழிலாளர் வர்க்கம், பெரு முதலாளிகளும் அவர்களின் பிரதிநிதியாக ஆண்டுகொண்டிருக்கும் மோடி தலைமையின் கீழான பாஜக-வின் ஆட்சியிலும் தொழிலாளர் வர்க்கத்தின் மீது ஏவப்படும் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் உறுதியுடனும், தொடர்ந்தும் போராடிவருவதற்கு சிஐடியு தன் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. கொரோனா வைரஸ் தொற்றைக் காரணங்காட்டி, சமூக முடக்கம் மற்றும் ஊரடங்கு போன்று  தொழிலாளர்களின் இயக்கங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்குப் பணிந்துவிடாமல், தொழிலாளர் வர்க்கம் தனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்டு, அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகத் தன்குரலை ஓங்கி ஒலித்திருக்கிறது. வீடுகளின் கூரைகளிலிருந்தும், பால்கனிகளிலிருந்தும் தன் குரலை எழுப்பிய தொழிலாளர் வர்க்கம், படிப்படியாக போராட்டத்தை வலுப்படுத்தி, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறுகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தபோதிலும் அவற்றையும் மீறி, நவம்பர் 26 அன்று ஒரு வெற்றிகரமான வேலைநிறுத்தத்தை நடத்தியது. இந்தப் போராட்டங்களை துவக்குவதில் தன்னுடைய பங்கிற்காக சிஐடியு பெருமிதம் கொள்கிறது. இப்போராட்டங்களில் தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் பங்கேற்றதற்காக அவர்களை சிஐடியு வாழ்த்துகிறது, பாராட்டுகிறது. நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள், உருக்கு (ஸ்டீல்) தொழிலாளர்கள், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர்கள், தனியார்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள், திட்ட (ஸ்கீம்) தொழிலாளர்கள் உட்பட அனைத்துத்துறைகளிலிருந்தும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.

தொழிலாளர் - விவசாயிகள் ஒற்றுமை
நாட்டின் செல்வத்தை உற்பத்தி செய்கின்ற உழைக்கும் மக்களில் பெரும் இரு பிரிவாக இருக்கக்கூடிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கிடையே அதிகரித்துவரும் ஒருமைப்பாடு,  மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இத்தகைய ஒருமைப்பாட்டை வளர்த்தெடுப்பதற்காக சிஐடியு எப்போதும் முயற்சிகள் மேற்கொண்டு வந்திருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தொழிலாளர்களும், விவசாயிகளும் தங்கள் சொந்தக் கோரிக்கைகளுக்காகப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், உணர்வுப்பூர்வமாக மற்றவர்களின் போராட்டங்களிலும் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு தொழிலாளர்கள்-விவசாயிகள் ஒற்றுமையை வலுப்படுத்தி, அதன் மூலம் பரந்துபட்ட மக்களை ஈடுபடுத்தி,ஓர் உயர்ந்த மட்டத்திற்குப் போராட்டங்களைக் கொண்டுசெல்வது, அவர்களுக்கு நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை மட்டுமல்ல, சுரண்டும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்கிற வரலாற்றுச்சிறப்புமிக்க வாய்ப்பினையும் நல்கிடும் என்பதிலும் சிஐடியுநம்பிக்கை கொண்டிருக்கிறது.

ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கு சேவை செய்வதற்காக மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்திட மதவெறி சக்திகளும் சாதி வெறி சக்திகளும் மேற்கொள்ளும் பிளவுவாத நடவடிக்கைகளை முறியடித்து, தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இதர உழைக்கும் மக்களின் அனைத்துத்தரப்பினரின் ஒற்றுமையையும் வலுப்படுத்திட நாடுமுழுதும்உள்ள தொழிலாளர்களை சிஐடியு வலியுறுத்துகிறது.தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் அனைத்துத்தரப்பினரின் ஒற்றுமையையும் வலுப்படுத்தி, அதன்மூலம் அவர்களின் நலன்களையும் நாட்டையும் பாதுகாத்திடுவதற்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்திட வேண்டும் என்றும் சிஐடியு வலியுறுத்துகிறது.

அடக்குமுறை நடவடிக்கைகள்
பாஜக அரசாங்கமானது தங்கள் கொள்கைகளை எதிர்ப்பவர்களை நசுக்கிட நயவஞ்சக வழிகளில் முயற்சிகள் மேற்கொள்வதை சிஐடியு வன்மையாகக் கண்டிக்கிறது. அரசமைப்புச் சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகள் மற்றும் நாடாளுமன்ற நெறிமுறைகள் மீறப்படுகின்றன. பாஜக அரசாங்கம், சட்டவிரோத நடவடிக்கைகள், தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்ற  மிகவும் அரக்கத்தனமான சட்டங்களைப் பயன்படுத்தியும், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை,மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் போன்றவற்றைப் பயன்படுத்தியும், தன் கீழ் இயங்கும் தில்லிக் காவல்துறையைப் பயன்படுத்தியும் தங்கள் கொள்கைகளுக்கு எதிரானவர்களையும், தங்கள் நடவடிக்கைகளுக்கு எதிராகப்போராடுகிறவர்களையும் மிரட்டி, அச்சுறுத்தி, கைது செய்து,சிறையில் அடைத்துப் பல்வேறு விதங்களில் துன்புறுத்தும்நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான மாணவர்கள், பெண்கள், இதழாளர்கள், தொழிற்சங்கவாதிகள், மனித உரிமை மற்றும் குடிமை உரிமைப்போராளிகள் போன்ற எண்ணற்றவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்புச்சட்டம் ஆகியவற்றின்கீழ் கைது செய்யப்பட்டு, ஆண்டுக்கணக்காக சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பிணையும் மறுக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் போன்ற நிறுவனங்கள் கூட அரசின் நிலைப்பாட்டிற்கு அடிபணிந்து போவது அதிகரித்துக்கொண்டிருப்பது வருந்தத்தக்கது. தற்போது ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களில் ஏற்பட்டுள்ள சமீபத்தியவளர்ச்சிப் போக்குகளை ஆராயும்போது, தேர்தல் ஆணையமும் இதேபோன்று சென்றுகொண்டிருப்பதையே காட்டுகிறது.மூலதனமும் அரசாங்கத்தில் உள்ள அதன் பிரதிநிதிகளும் தொழிலாளர்கள் மற்றும் இதர உழைக்கும் மக்கள்மீது மிகவும் மிருகத்தனமாகத் தாக்குதல் தொடுப்பதுஎன்பது இந்தியாவிற்கு மட்டுமானது அல்ல. கொரோனாவைரஸ் தொற்று பரவுவதற்கு முன்பேயே பொருளாதார நெருக்கடி அதிகரித்திருந்த சூழ்நிலையில், உலகம் முழுதும் உள்ள ஆளும் வர்க்கங்கள் தொழிலாளர்களைக்கசக்கிப் பிழிந்து, தங்கள் லாபத்தை அதிகப்படுத்துவதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. தொழிலாளர்கள் கடுமையாகப் போராடிப் பெற்ற உரிமைகளைக் கட்டுப்படுத்தியுள்ள தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்கள், குறிப்பாக சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுப் பேர உரிமை,ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் பல முதலாளித்துவ நாடுகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆளும் வர்க்கங்கள் தங்கள் குறிக்கோளை அடைவதற்காக வலதுசாரிசக்திகளின் வளர்ச்சியை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றன. மக்களை மதம், இனம், பிராந்தியம் போன்று  பல்வேறுஅடிப்படைகளின்கீழ் பிளவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.நவீன தாராளமயக் கொள்கை தோல்வியடைந்த நிலையிலும்கூட, முதலாளித்துவ அமைப்புமுறையால் இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, மக்கள் மீது சுமைகளை மேலும் மேலும் ஏற்றுவதைத் தவிர வேறெதையும் அதனால் செய்ய முடியவில்லை. இவை நெருக்கடிக்குத் தீர்வு அளிப்பதற்குப் பதிலாக அதனை மேலும் மோசமானதாகவே மாற்றியிருக்கிறது.

பாசிச நோக்கத்துடன் ஜனநாயகக் கூறுகள் அழிப்பு
முதலாளித்துவ அமைப்புமுறையின் கீழ் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து மோசமடைந்து கொண்டிருக்கக்கூடிய நிலையில், ஆளும் வர்க்கம் தன் பொருளாதாரஅமைப்புமுறையையும், அரசியல் அமைப்புமுறையையும் ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரத்தையும் மத்தியத்துவப்படுத்திடவும், எதேச்சதிகார மானதாக மாற்றிடவும் தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அவை அனைத்து ஜனநாயகக் கூறுகளையும் தன்னுடைய தெளிவான பாசிச நோக்கத்துடன் அழித்துக்கொண்டிருக்கின்றன. சுகாதாரம், கல்வி, கனிம வளங்கள் உட்பட தொழிற்சாலைகள் அனைத்தையும் தனியார்மயமாக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றன. நம் நாட்டின் பொருளாதாரத்தையும், சந்தைகளையும் அந்நிய ஏகபோக கார்ப்பரேட்டுகளுக்கு அகலத் திறந்துவிட்டிருக்கிறது. நம்வேளாண்மையையும் மற்றும் அதனைச் சார்ந்த அனைத்துக் கூறுகளையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதற்கும், அவற்றின் மூலம் அவர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கும் வழிவகுத்துத்தந்திருக்கிறது.தொழிலாளர் (விரோத) சட்டங்கள் மூலம் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளின் மீதான தாக்குதல்கள், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், பேச்சுரிமை, ஆளும்கட்சிக்கு எதிராகக் கருத்து கூறும் உரிமை, எதிர்க்கட்சிகள் மற்றும் போராட்டங்கள் மீதான தாக்குதல்கள், அரசமைப்புச்சட்ட ஷரத்துக்களைக் காலில் போட்டு மிதித்தல், நாடாளுமன்ற நெறிமுறைகளை ஓரங்கட்டுதல், தற்போது கூட்டாட்சித் தத்துவத்தின் கீழ் அமைந்துள்ள மாநில அரசாங்கங்களின் உரிமைகள் மீதான தாக்குதல்கள் என அனைத்தும்இத்தகைய எதேச்சதிகாரத் திட்டத்தின் கீழ் அமைந்துள்ளபிரிக்கமுடியாத பகுதிகளேயாகும். மக்களின் ஒற்றுமையைச்சீர்குலைப்பதற்காக மதவெறி சக்திகளையும், சாதி வெறிசக்திகளையும் பயன்படுத்துதல்,  விரல்விட்டு எண்ணக்கூடியஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கு சேவை செய்வதற்காக மக்கள் போராட்டங்களைப் பலவீனப்படுத்துதல் ஆகியவையும் அவர்களின் இதே நோக்கத்திற்கான அரசியல் நிகழ்ச்சிநிரலின் ஓர் அங்கமேயாகும்.
நம் நாட்டில் உள்ள தொழிலாளர்களும், உலகம் முழுதும் உள்ள தொழிலாளர்களும் முதலாளித்துவ அமைப்பானது தங்கள் நலன்களைப் பாதுகாத்திடாது என்பதைத்தற்போது உணர்ந்துகொள்வது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பாஜக அரசாங்கத்தின் ‘கார்ப்பரேட்டுகளுக்கு அடி பணிந்து நடந்திடும்’ குணத்தை மக்கள் புரிந்துகொள்வது என்பதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு மக்கள் புரிந்துகொள்வதை மேலும் அதிகரித்திட வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின்மத்தியில் இந்த அரசாங்கத்திற்கு எதிராக விழிப்புணர்வை உருவாக்குவதற்கு இதுவே சரியான தருணமாகும்.  தங்களின்நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதை அவர்களுக்கு அடையாளம் காட்டிட உதவிட வேண்டும். அவர்களின் நண்பர்களுடன் அவர்களை அணிதிரட்டிட வேண்டும்.அவர்களின் எதிரிகளுக்கு எதிராக ஒன்றுபட்டுப் போராடிட வேண்டும்.

வர்க்க ரீதியாக முறியடிப்போம்!
இன்றைய ஆட்சியாளர்களால் மக்கள் மீதும், பொருளாதாரத்தின் மீதும், ஜனநாயக அமைப்பு முறையின் மீதும், சமூக நல்லிணக்கத்தின் மீதும், ஒட்டுமொத்தமாக தேசஒருமைப்பாட்டின்மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் வர்க்கத்தின் இந்தத் தாக்குதல்களின் குணத்தைப் புரிந்துகொண்டு, தொழிலாளர் வர்க்கம் இதனை வர்க்கரீதியாக முறியடித்திட வேண்டும்.தொழிலாளர் வர்க்கமும் மக்களும் தங்களின் உரிமைகளையும், கண்ணியத்தையும், மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதற்காகவும், நாட்டின் ஜனநாயக அமைப்பு முறையையும் அதன் மாண்புகளையும் பாதுகாப்பதற்காகவும், நாட்டின் பொருளாதாரத்தையும், நாட்டின் செல்வாதாரங்களையும் பாதுகாப்பதற்காகவும், எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்காகவும் மக்களுடன் இணைந்து தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபட்டுப் போராட வேண்டும்.இதற்கு, முதலாளித்துவ அமைப்புமுறையின் இயல்பானசுரண்டும் குணத்தையும், அதன் மனிதாபிமானமற்ற தன்மையையும் அதன் அரசியலையும் அம்பலப்படுத்திக் காட்டுவதை உறுதியாகவும் தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும். இந்தக் கடமையை மேற்கொள்ள இந்த மே தினத்தில் நாம் சபதம் எடுத்துக் கொள்வோம்.

அறைகூவல்
நம் நாட்டிலும் உலகம் முழுதும் இருக்கின்ற அனைத்துத் தொழிலாளர்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் சிஐடியு கீழ்க்கண்டவாறு அறைகூவல் விடுக்கிறது: அனைத்து மக்களுக்கும் கோவிட்-19கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டும் என்றும், அதேபோன்று அனைவருக்கும் பொது சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோரி ஒன்றுபடுவோம், போராடுவோம்.  

தொழிலாளர்கள் மற்றும் அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களும் கடுமையாகப் போராடிப் பெற்ற  உரிமைகள் பறிக்கப்பட்டிருப்பதற்கு எதிராகவும், அவர்களின் வாழ்வாதாரங்கள் மீது முதலாளித்துவத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கு எதிராகவும் ஒன்றுபடுவோம், போராடுவோம். மாற்றுக்கொள்கை கொண்ட, மக்கள் ஆதரவு ஆட்சி அமைந்திடஒன்றுபடுவோம், போராடுவோம்.தொழிலாளர் வர்க்கத்தையும், மக்களையும் பிளவுபடுத்திட ஆளும் வர்க்கங்கள் மேற்கொள்ளும்அனைத்து முயற்சிகளையும் முறியடித்திட, ஒன்றுபடுவோம், போராடுவோம்.

மே தினம் வாழ்க.

தொழிலாளர் வர்க்க ஒற்றுமை ஓங்குக.

தொழிலாளி-விவசாயி ஒற்றுமை ஓங்குக.

சோசலிசம் வாழ்க.

முதலாளித்துவம் வீழ்க.

தமிழில்: ச.வீரமணி

முழுக்கட்டுரைத் தொகுப்பு 4-ஆம் பக்கத்தில் உள்ளது... 

;