வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.14 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (பிப்ரவரி 1) முதல் அமலுக்கு வருகிறது.
இன்று 2024-25 இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதற்கு முன்னதாக சிலிண்டர் விலையை மோடி அரசு உயர்த்தியுள்ளது.
சிலிண்டர்களுக்கு அதிகரித்துள்ள தேவை மற்றும் சர்வதேச சந்தையில் விலை பாதிப்பு காரணமாக சிலிண்டரின் விலை 14 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை கடந்த ஜனவரி 1-ஆம் தேதி ரூ.1.50 உயர்த்தப்பட்டு ரூ.1349 விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.14 உயர்த்தப்பட்டு, ரூ.1755.50 இருந்து ரூ.1769.50 ஆக விற்கப்படுகிறது.
வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டிருந்தாலும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
பட்ஜெட் தினத்தன்று சிலிண்டர் விலை குறையும் என்று எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.