india

img

கட்டணங்களை 3 மடங்கு உயர்த்திய விமான நிறுவனங்கள்  

ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக பல்வேறு நாடுகளுக்கான விமான கட்டணங்களை, விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது.  

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாற்றம் அடைந்துள்ள புதிய வகை ஒமிக்ரான் கொரோனா, பல்வேறு நாடுகளில் தீவிரமடைந்து வருகிறது. அதனை தொடர்ந்து தங்கள் நாடுகளுக்குள் தொற்று பரவாமல் இருக்க பிரிட்டன், ஜெர்மனி, இஸ்ரேல், கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தென் ஆப்பிரிக்கா உடனான போக்குவரத்தை நிறுத்திவிட்டன. இதனால் பிரிட்டன், அமெரிக்கா நாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள், தென் ஆப்பிரிக்கா விமான நிலையங்களில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றன.

இந்த நிலையில் பல்வேறு நாடுகளுக்கான விமான கட்டணங்களை விமான நிறுவனங்கள் உயர்த்தி உள்ளது.  டெல்லியிலிருந்து கனடாவின் டொரன்டோ நகருக்கு இருந்த பயண கட்டணம் ரூ.80,000லிருந்து 2 லட்சத்து 37 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. டெல்லியிலிருந்து லண்டனுக்கு ரூ.60,000லிருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பிசினஸ் வகுப்பு டிக்கெட்டுகள் ரூ.6 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு நகரங்களுக்கு இடையிலான விமான கட்டணம் 2 முதல் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

;