இன்னும் ஒரு வாரத்தில் தமிழகத்திலிருந்து 500 விவசாயிகள் தில்லி போராட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ளனர். தில்லி போராட்டம் பஞ்சாப் விவசாயிகள் மட்டுமே நடத்தும் போராட்டம் என்று ஆட்சியாளர்கள் சில ஊடகங்களும் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. ஆனால் தலைநகர் தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடம் மினி இந்தியா போல் உள்ளது. கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான், தெலுங்கான, ஜம்மு கஷ்மீர், திரிபுரா என அனைத்து மாநிலங்களைச்சேர்ந்த விவசாயிகளும் பங்கேற்றுள்ளனர்.
விஜு கிருஷ்ணன், இணைச் செயலாளர், அகில இந்திய விவசாயிகள் சங்கம்