மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி வழங்க ஒன்றிய அரசு முடிவு.
2023 ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்வு கணக்கிட்டு வழங்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்கிறது.