india

img

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசு அக்கறை காட்டவில்லை - உச்சநீதிமன்றம் 

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசு உரிய முடிவெடுக்காவிட்டால் நாங்கள் முடிவெடுக்க வேண்டியதிருக்கும்  என  உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், பேரறிவாளனை விடுவிப்பது குறித்து தன் நிலைப்பாட்டை ஒருவாரத்திற்குள் ஒன்றிய அரசு தெரிவிக்க வேண்டும் என கூறி வழக்கை ஒத்திவைத்தது.

இதையடுத்து இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக ஒன்றிய அரசு என் முடிவெடுக்கவில்லை என்றும், பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக ஒன்றிய அரசு முடிவெடுக்கக் கால தாமதம் செய்வது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.

மேலும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசு அக்கறை காட்டவில்லை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இறுதியில், அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் இவ்வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசின் முடிவைத் தெரிவிக்கவில்லை என்றால், நீதிமன்றமே பேரறிவாளனை விடுதலை செய்யும் என கூறி செவ்வாய்க்கிழமைக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தனர். 

;