india

img

ஹால்டியா துறைமுக கூட்டுறவு சங்கத் தேர்தல்:

கொல்கத்தா, பிப். 11 - மேற்குவங்க மாநிலம் ஹால்டியா துறைமுக நுகர்வோர் கூட்டுறவு சங்கத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முற்போக்கு கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவிய இத்தே ர்தலில் பீபி கோஷ் ஆடிட்டோரியத்தில் புதனன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தொடர்ந்து வியாழனன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது

.  இதில், மொத்தமுள்ள 54 இடங் களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முற்போக்கு கூட்டணி 49 இடங்களைப் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. ஆளுங்கட்சி யான திரிணாமுல் காங்கிரஸ் 5  இடங்களையும், பாஜக ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாமலும் தோல்வி யை சந்தித்தன.

இந்த வெற்றியின் மூலம் ஹால்டியா  துறைமுகத்தில் செங்கொடி மீண்டும் கம்பீரமாக உயர்ந்தது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தலைமையிலான இடது முற்போக்கு கூட்டணியின் வெற்றி ஹால்டியா துறை முகத்தில் மட்டுமின்றி, ஹால்தியா சுற்று வட்டாரப்பகுதிகள், கிழக்கு மேதினிபூர் பகுதிகளிலும் ஒரு முக்கிய விழாவாக பொதுமக்களால் கொண்டாடப்பட்டது.

ஹால்டியா கூட்டுறவு சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் பெற்றுள்ள பிரம்மாண்ட வெற்றி வரவிருக்கும் மக்க ளவை தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று இடது முற்போக்குக் கூட்டணி தொண்டர்கள் மகிழ்ச்சியும் நம்பிக்கை யும் தெரிவிக்கின்றனர்.

திரிணாமுல் காங்கிரஸின் “திருட்டு” ஆதிக்கத்திற்கு முடிவு 
ஹால்டியா கூட்டுறவு சங்கத் தேர்த லில் இடதுசாரிகளின் வெற்றி குறித்து கொல்கத்தா துறைமுக அறக்கட்டளை துணைப் பொதுச்செயலாளர் பிமன் மிஸ்திரி கூறுகையில், “திரிணாமுல் காங்கிரஸின் தவறான ஆட்சிக்கு எதி ராக பிரம்மாண்ட கூட்டணியுடன் கள மிறங்கினோம். துறைமுக தொழிலாளர்கள் மட்டுமின்றி, ஓய்வுபெற்ற தொழிலாளர் களும் திரிணாமுல் காங்கிரஸின் ஊழல், திருட்டுக்கு எதிராக உறுதியாக நின்று, இடதுசாரி கூட்டணியை வெற்றி பெற வைத்துள்ளனர். இந்த வெற்றி வரும் நாட்களில் திரிணாமுல் காங்கி ரஸ், பாஜகவை வீழ்த்தும் அளவிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.