india

img

குஜராத்தில் 5 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாயம்: என்சிஆர்பி அதிர்ச்சி தகவல்

குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தரவுகளின்படி, 2016 இல் 7,105 பெண்களும், 2017 இல் 7,712 பெண்களும், 2018 இல் 9,246 பெண்களும், 2019 இல் 9,268 பெண்களும், 2020 இல் 8,290 பெண்கள் என மொத்தம் 41,621 பெண்கள் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்கள் பாலியல் வணிகத்திற்கு வலுக்கட்டயமாக தள்ளப்பட்டுள்ளார்கள் எனவும் கூறப்படுகிறது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குஜராத்தில் காணாமல் போனதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து முறையான நடவடிக்கை எடுக்காதது, 20 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக செயல்பாடற்ற அரசாக இருப்பதை தெளிவாக காட்டுகிறது.