india

img

சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த பாஜக வேட்பாளர்... போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்...

மங்களூரு:
சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதுடன், கொலைமிரட்டலும் விடுத்தபாஜக வேட்பாளரை, கர்நாடக போலீசார்போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் சுள்ளியா தாலுகா கல்மடுக்கா கிராமத்தைச் சேர்ந்தவர் உக்ரப்பா என்றநாராயணா. பாஜக-வைச் சேர்ந்த இவர்,கல்மடுக்கா பஞ்சாயத்து பாஜக வேட்பாளரும் ஆவார்.இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உக்ரப்பா, அதேபகுதியை சேர்ந்த தனது உறவுக்கார சிறுமியை, பலவந்தப்படுத்தி, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதுடன், இதுபற்றி வெளியே கூறினால் கொலைசெய்து விடுவேன் என்றும்மிரட்டிய சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.இதுதொடர்பாக, சிறுமியின் பெற் றோர், பெல்லாரே போலீசில் புகார் கொடுக்கவே, அவர்கள் உக்ரப்பாவை பிடித்து விசாரித்துள்ளனர். அவரும் சிறுமியை வல்லுறவுக்கு உள்ளாக்கியதை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.இதையடுத்து, ஊராட்சி வாக்குப்பதிவு நாளன்று பாஜக வேட்பாளர் உக்ரப்பாவை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

;