india

img

கர்நாடகாவில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் பலி  

கர்நாடகாவில் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் இருந்து தனியார் சொகுசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது இன்று நள்ளிரவு தானேபுரம் பகுதி அருகே வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.  

இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர், பேருந்து ஓட்டுநர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் படுகாயமடைந்த 26 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்தது.  

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;