india

img

ஒடிசா: டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலி

ஒடிசாவில் டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
ஒடிசா மாநிலம், மயூர்பாஞ் மாவட்டத்தில் நடனக்குழுவினர் டிராக்டரில் நேற்றிரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், டிராக்டர் தீபாஷாஹி எனும் இடத்தில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், 5 பேர் பலியானார்கள். 41 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

;