india

img

உ.பி.யில் தேர்தல் முறைகேடு.. படம்பிடித்த பத்திரிகையாளர் மீது ஐஏஎஸ் அதிகாரி தாக்குதல்..

உன்னோவ்:
உத்தரப்பிரதேச மாநிலத்தில்  தேர்தல் நடைமுறைகளில் முறைகேடு செய்த ஐஏஎஸ் அதிகாரியை வீடியோவில் பதிவுசெய்த பத்திரிகையாளரை ஐஏஎஸ் அதிகாரி தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சனிக்கிழமையன்று நடந்த தேர்தலின்போது, பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது. கட்சித் தொண்டர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். பல்வேறு மாவட்டங்களில் தேர்தலின்போது முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது.சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தேர்தலில் முறைகேடு செய்து பாஜக வெற்றி பெற்றுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளன. இந்நிலையில், தேர்தலின்போது, பத்திரிகையாளரை ஐஏஎஸ் அதிகாரி கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உன்னோவ் மாவட்ட வளர்ச்சி அதிகாரியாக உள்ள திவ்யன்ஷு பட்டேல், தேர்தல் நடைமுறைகளில் முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது. இதனை, பத்திரிகையாளர் ஒருவர் வீடியோவாக எடுத்த நிலையில், ஆத்திரமடைந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பத்திரிகையாளரை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று  மாவட்ட நீதிபதி உறுதியளித்துள்ளார்.

;