india

img

ஏர் இந்தியாவுடன் ஏர் ஆசியா இந்தியா நிறுவனத்தை இணைக்க டாடா குழுமம் முடிவு

ஏர் இந்தியா நிறுவனத்துடன் ஏர் ஆசியா நிறுவனத்தை இணைக்க டாடா குழுமம் முடிவு செய்துள்ளது.

இந்திய அரசின் விமான சேவையாக இருந்த ஏர் இந்தியாவை சில மாதங்களுக்கு முன்பு டாடா குழுமம் வாங்கியது. அரசிற்கு என்று இருந்த விமான சேவை நிறுவனத்தை தனியாரிடம் விற்பதா என பொதுமக்கள் மத்தியில் அப்போதே விமர்சனம் எழுந்தது. மேலும், உக்ரைன் – ரஷ்யா போரின் போது, உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க அரசிடம் விமான சேவை இல்லாமல் இருந்ததும். உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வர ஏர் இந்தியா லட்சக்கணக்கில் பயணக்கட்டணம் கேட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசிடம் இருந்த விமான சேவை நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது பெரும் தோல்வியாகவே கருதப்படுகிறது.

இந்நிலையில், தற்போது டாடா குழுமத்தின் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா மற்றொரு விமான சேவை நிறுவனமான ஏர் ஆசியா இந்தியாவை வாங்கி இணைக்க ஒப்புதல் வழங்கக்கோரி இந்தியப் போட்டி ஆணையமான சிசிஐ-யிடம் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏர் ஆசியா இந்தியா நிறுவனத்தில் டாடா குழுமம் 83.67 சதவிகித பங்குகளை வைத்திருந்த நிலையில், மீதமுள்ள பங்குகளுக்கான தொகையைச் செலுத்தி தற்போது அதனை முழுமையாக வாங்க உள்ளது.

மேலும், ஒன்றிய அரசின் வசமிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை இந்தாண்டு வாங்கிய டாடா குழுமம் தற்போது ஏர் ஆசியா நிறுவனத்தையும், ஏர் இந்தியா நிறுவனத்தையும் இணைத்து ஏர் இந்தியா பெயரிலேயே நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.