india

img

வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி கிரெடிட் கார்டுகளில் மாற்றம் கூடாது: ஆர்பிஐ கடும் எச்சரிக்கை  

வாடிக்கையாளர்களின் அனுமதி பெறாமல், புதிய கார்டுகளை வழங்குவதோ அல்லது ஏற்கனவே அவர்கள் வைத்திருக்கும் கார்டை மேம்படுத்தும் முயற்சியை மேற்கொள்வதோ கூடாது என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.  

வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி தொடர்ந்து மாற்றியமைத்து வருகிறது. அதன்படி வாடிக்கையாளர்களின் அனுமதியை பெறாமல், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வழங்குவது தொடர்பான கோரிக்கை இல்லாத நிலையில், புதிய கார்டுகளை வழங்குவதோ அல்லது ஏற்கனவே வைத்திருக்கும் கார்டை மேம்படுத்தும் முயற்சியை மேற்கொள்வதோ கூடாது என அறிவுறுத்தி உள்ளது. வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி மீறி செயல்பட்டால், இருமடங்கு லாபம் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.  

மேலும் வாடிக்கையாளர்களிடமிருந்து நிலுவை தொகையை வசூலிக்கும்போது மிரட்டல் அல்லது மோசமான செயலில் ஈடுபடக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது. மீறினால், கார்டு உரிமையாளர்கள் ரிசர்வ் வங்கியின் குறை தீர்ப்பாளரை அணுகலாம் என்றும் தெரிவித்துள்ளது.  

வழக்கமாக புதிதாக வங்கிக்கணக்கு திறந்தாலே அத்துடன் ஏடிஎம் கார்டையும் வங்கி வழங்கிவிடும். ஆனால் இனிமேல் வாடிக்கையாளர்கள் விரும்பினால் மட்டுமே ஏடிஎம் கார்டுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது  இந்த வழிகாட்டுதல்கள் வரும் ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து அமலாகும் என ரிசர்வ் வங்கி அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதையடுத்து வங்கிகள், பேமெண்ட் வங்கிகள், கோ ஆப்ரேட்டிவ் வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் என அனைத்திற்கும் பொருந்தும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.