புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறக்கக்கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். நாடாளுமன்ற கட்டடத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், பிரதமர் மோடியை, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வியாழன்று சந்தித்து புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்க அழைப்பு விடுத்தார். இதன்படி, நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி மே 28-ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
சாவர்க்கரின் பிறந்த தினமான மே 28-ஆம் தேதி நாடாளுமன்ற புதிய கட்டடத்தை திறந்து வைக்க இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடத்தை மோடி திறக்ககூடாது, குடியரசு தலைவர் தான் திறக்க வேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.