india

img

ராஜீவ் காந்தி இன்ஸ்டிட்யூட்டுக்கு கோல்வால்கர் பெயரா? மத்திய அமைச்சருக்கு கேரள முதல்வர் கடிதம்

திருவனந்தபுரம்:
ராஜீவ் காந்தி உயிரி தொழில்நுட்ப மையத்திற்கு கோல்வால்கர்  பெயர் சூட்டுவதற்கான நடவடிக்கை கைவிடப்பட வேண்டும் என்றும், ஆராய்ச்சி நிறுவனத்திற்கு புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானி பெயரிட வேண்டும் என்றும் கோரி முதல்வர் பினராயி விஜயன் மத்திய சுகாதார, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.ராஜீவ் காந்தி பயோடெக்னாலஜி மையத்திற்கு முதல்வர் எழுதிய கடிதத்தில், கோல்வால்கரின் பெயர் சூட்டுவதற்கான நகர்வு கைவிடப்பட வேண்டும் என்றும், அந்த நிறுவனத்திற்கு புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானியின் பெயர் சூட்ட வேண்டும் என்றும் கோரியுள்ளார். நாட்டின் முக்கியமான ஆராய்ச்சி நிறுவனம் அரசியல் குறுங்குழுவாதத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். கேரள அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனம் மேலும் மேம்பாட்டுக்காக மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதை நினைவுபடுத்தியுள்ள கடிதத்தில், பெயரை மாற்ற முடிவு எடுக்கப்பட்டால், அரசின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

;