india

img

ஜூலை 25-இல் குடியரசு தலைவராக பதவியேற்கிறார் திரவுபதி முர்மு

குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற திரவுபதி முர்மு வருகிற ஜூலை 25-ஆம் தேதி பதவியேற்கிறார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்தம் பதிவான 4754 வாக்குகளில் 53 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. 4701 வாக்குகள் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மொத்த வாக்குகளில் 2824 வாக்குகள் பெற்று திரவுபதி முர்மு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதன்மூலம் திரவுபதி முர்மு நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராகியுள்ளார். திரவுபதி முர்முவின் வெற்றிக்கு தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திரவுபதி முர்மு குடியரசுத் தலைவராக வருகிற ஜூலை 25-ஆம் தேதி பதவியேற்க உள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.