கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 797 பேருக்கு கோவிட் தொற்று பதிவாகியுள்ள நிலையில், 5 உயிரிழப்புடன், கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4091 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தலா 1 என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,33,351 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் அதிகபட்சமாக 78, அதை தொடர்ந்து குஜராத்தில் 34, கோவாவில் 18, கர்நாடகாவில் 8, மகாராஷ்டிராவில் 7, ராஜஸ்தானில் 5, தமிழ்நாட்டில் 4, தெலங்கானாவில் 2 மற்றும் தில்லியில் 1 என மொத்தம் 157 பேருக்கு JN.1 வகை தொற்றால் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இதுவரை கேரளாவில் அதிகபட்சமாக கோவிட் பாதிப்புகள் 19 2,522 ஆகவும், கர்நாடகாவில் 568 ஆகவும், மகாராஷ்டிராவில் 369 ஆகவும், தமிழ்நாட்டில் 156 ஆகவும் பதிவாகியுள்ளன.