india

img

இந்தியாவில் புதிதாக 573 பேருக்கு கோவிட் பாதிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 573 பேருக்கு கோவிட் தொற்று பதிவாகியுள்ள நிலையில், 2 உயிரிழப்புடன், கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4565 ஆக உயர்ந்துள்ளது.

ஹரியானா மற்றும் கர்நாடகாவில் தலா 1 என மொத்தம் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,33,366 ஆக உயர்ந்துள்ளது.

விமான நிலையத்தில் 15,24,266 பயணிகளுக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் 4,50,14,481 கோவிட் பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை 93,58,79,495 பேருக்கு கோவிட் சோதனை சோதனை செய்யப்பட்டுள்ளது எனச் சுகாதார இணையத்தில் தரவு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 263 பேருக்கு JN.1 வகை தொற்றால் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

;