india

img

அசாம் வெள்ளப்பெருக்கில் 3 பேர் பலி

 அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.    

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களான மேகாலயா மற்றும் அருணாசலப் பிரதேசத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.     அதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  

லக்கிம்பூர் மற்றும் நாகோன் மாவட்டங்களில் பல சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்ப்பாசன கால்வாய்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ஏஎஸ்டிஎம்ஏ) தகவலின்படி, டிமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள ஹஃப்லாங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த வெள்ளப் பெருக்கால் கச்சார், திமஜி, ஹொஜய், கர்பி அங்லோங் மேற்கு, நகாவன் மற்றும் கம்ரூப் (மெட்ரோ) ஆகிய 6 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.    

அந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட 94 கிராமங்களை சேர்ந்த மொத்தம் 24,681 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1,732.72 ஹெக்டேர் நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதாக என அசாம் மாநில பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்து உள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகளுடன் ராணுவம், துணை ராணுவப் படைகள் மற்றும் பேரிடர் மீட்புப் படைகளை அதிகாரிகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

 

;