india

img

அரியானாவில் டிச.14 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு!

அரியானா மாநிலத்தில்  டிசம்பர் 14ஆம் தேதி முதல் திறக்கப்படும் என மாநில பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

கொரோன நோய் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இணையம் வழியாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், பா.ஜ.க ஆட்சி செய்யும் அரியானா மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. திறக்கப்பட்ட சில தினங்களிலே 83 மாணவர்கள், 8 ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால்  நவம்பர் 30ஆம் தேதி வரை பள்ளிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டது.

இதனைதெடர்ந்து, மீண்டும் அரியானா மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதன்படி, டிசம்பர் 14ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி 3 மணிநேரம் பள்ளிகள் திறக்கப்படும் எனவும், டிசம்பர் 21ஆம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

;