india

img

பொது சிவில் சட்டம் குறித்து கருத்துக் கேட்கும் இந்திய சட்ட ஆணையம்!

பொது சிவில் சட்டம் குறித்து 30 நாட்களுக்குள் பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகள் தங்களது கருத்துகளை சமர்ப்பிக்கலாம் என்று 22-ஆவது இந்திய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது.
நாட்டில் பல்வேறு மதங்கள் பின்பற்றி வரும் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை உள்ளிட்ட நடைமுறைகளுக்கு பதிலாக எல்லோருக்கும் ஒரே மாதிரியான சட்டமான பொது சிவில் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று பாஜக அரசு பல ஆண்டுகளாக முயன்று வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். 
ஏற்கனவே, கடந்த 2018-ஆம் ஆண்டில் இது தொடர்பாக ஆய்வறிக்கை ஒன்றை 21-ஆவது சட்ட ஆணையம் வெளியிட்டது. எதிர்ப்புகள் வலுத்த நிலையில், இச்சட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் பொது சிவில் சட்டம் குறித்து கருத்துகள் கேட்கப்படுகிறது. 30 நாட்களுக்குள் பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகள் தங்களது கருத்துகளை சமர்ப்பிக்கலாம் என்று 22-ஆவது இந்திய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது.membersecretary-lci@gov.in என்ற மின்னஞ்சலில் பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகள் தங்களது கருத்துகளை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.