மோடியின் வெறுப்பு பேச்சுக்கு எதிராக ஆயிரக்கணக்கான கடிதங்களை தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகளோ, அரசியல்வாதிகளோ எழுதவில்லை. ஜனநாயகத்தை பாதுகாக்க நினைக்கும் இந்திய மக்கள் எழுதியிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை வேண்டி குடிமக்கள் இப்படி கடிதம் எழுதுவது முன்னெப்போதும் நிகழாத ஒன்று.