india

img

விளையாட்டுத்துறையில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக்கு 12 குழுக்கள் தான்!சு. வெங்கடேசன் எம்.பி. கேள்வியால் அம்பலமான மோடி அரசின் அலட்சியம்

புதுதில்லி, டிச. 10 - இந்திய விளையாட்டு ஆணையத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் தேசிய அளவிலான சீர்மிகு நிறுவனங்கள், விரிவாக்க மையங்கள் உள்ளன. 10 ஊழியர்களுக்கு மேல் உள்ள அனைத்து நிர்வாக அலுவலகங்களிலும் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது சட்டவிதி.

அந்த வகையில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுக்களின் எண்ணிக்கை, சட்ட வழிகாட்டலின் படி அமைக்கப்பட்டுள்ளதா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு, 100-க்கும் மேற்பட்ட அமைப்புகள் உள்ள விளையாட்டு ஆணையத்தில் மண்ட லத்திற்கு ஒன்று விகிதம் வெறும் 12 குழுக்கள் மட்டுமே அமைக்கப்பட்டு இருப்பதாக பதிலளித்து ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அதிர்ச்சி அளித்துள்ளார்.

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தமது அறிக்கையில் குறிப்பிட்டிருப்ப தாவது: இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு உட்பட்ட நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு உள் விசாரணைக் குழுக்கள், அவற்றின் உள்ளடக்கம், புகார்கள்  பற்றி நான் எழுப்பிய கேள்விக்கு (எண் 176/  25.11.2024) இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பதில் அளித்துள்ளார்.

அமைச்சர் பதில்

\இந்திய விளையாட்டுத்துறை ஆணை யத்தின் கீழ் 12 மண்டல மையங்களும், பல்வேறு பயிற்சி மையங்கள் தேசிய அளவிலான சீர்மிகு நிறுவனங்கள், விரிவாக்க மையங்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட அமைப்புகள் உள்ள நிலையில், எனது  கேள்விக்கு பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “இந்திய  விளையாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகம் மற்றும் 12 மண்டல மையங்களில் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்றும்; “அந்தந்த மண்டல மையங்களுக்கு உட்பட்ட அமைப்புகளில் எழும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட மண்டல மையங்களின் குழுக்கள் நடவடிக்கை எடுக்கும்” என்றும் தெரி வித்துள்ளார். “2020-24க்கு இடைப்பட்ட காலத்தில் 22 புகார்கள் வந்தன” என்றும்; “அவற்றில் 18 புகார்களுக்கு தீர்வுகள் தரப் பட்டுள்ளன” என்றும், “உள்விசாரணைக் குழுக்களில் சட்டத்தின்படி வெளியாட்கள் இடம்  பெற்றுள்ளனர்” என்றும் தெரிவித்துள்ளார். 

சட்ட மீறலா?

அமைச்சரின் இந்த பதில் சட்டத்தின் நெறிகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளனவா என்ற  கேள்வியை எழுப்புகிறது. பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் 2013-இன் அத்தியா யம் 2 பிரிவு 4(1)-ன் படி 10 ஊழியர்களுக்கு மேல் உள்ள எல்லா நிர்வாக அலகுகளிலும் உள் விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.  

ஆனால், மண்டல மையங்களின் உள் விசாரணைக் குழுக்களே அதற்கு கீழான நிர்வாக அலகுகளையும் கவனிக்கும் என்பது முறைதானா? என்பதை அமைச்சர் தான் விளக்க வேண்டும்.  மேலும் ஒரு புகார் இரண்டு ஆண்டுகளா கவும், இன்னொன்று ஓராண்டாகவும் நிலுவை யில் இருப்பதன் காரணம் என்ன என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும். உரிய காலத்தில் நீதி வழங்கப்படாவிடில் விசாரணை முறைமை மீது நம்பிக்கை ஏற்படாது.

இதுகுறித்து ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.  மல்யுத்த வீராங்கனைகள் முன்வைத்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கள் நாட்டையே உலுக்கியது. இப்பின்புலத்தில் ஒன்றிய அரசும், இந்திய விளையாட்டுத் துறை ஆணையமும் பாலின நிகர்நிலை கூருணர் வோடு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் கேட்டுக்கொண்டுள்ளேன்.  இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.