பயிற்சி மையங்களுக்கு பெயர் பெற்ற இடமான கோட்டா நகரம் பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத் தில் உள்ளது. நீட், ஜேஇஇ உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுக்கும் கோட்டாவில் சிறந்த பயிற்சி மையங்கள் இருப்பதாக கூறப் படுவதால், நாடு முழுவதிலும் இருந்து - குறிப்பாக வடமாநி லங்களிலிருந்து மாணவ - மாண விகள் கோட்டா நகருக்கு தனி யாக குடிபெயர்ந்து விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டு களாக கோட்டாவில் நீட், ஜேஇஇ தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவ-மாணவிகள் தற் கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வரு கின்றன.
கடந்த ஓராண்டில் இது வரை இல்லாத வகையில் அதிக பட்சமாக 26 மாணவர்கள் தற் கொலை செய்து கொண்டுள்ள நிலையில், நடப்பாண்டின் ஜனவரி மாதத்தில் மட்டும் 2 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டுள் ளனர். கடந்த வாரம் உத்தரப்பிர தேசத்தை சேர்ந்த முகமது ஜெய்த் (19) என்ற மாணவர் தற் கொலை செய்து கொண்ட நிலை யில், அடுத்த ஒரே வாரத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நிகரிகா என்ற 19 வயது பெண் திங்களன்று தற்கொலை செய்து கொண்டார். நிகரிகா ஜேஇஇ தேர்வுக்கு தயாராகி வந் தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓடி ஒளியும் ஓம் பிர்லா
மாணவர்களின் தற்கொலை புகலிடமாக உள்ள ராஜஸ்தா னின் கோட்டா, மக்களவை சபா நாயகரான பாஜகவின் ஓம் பிர்லாவின் சொந்த தொகுதியா கும். இத்தொகுதியில் தொட ர்ந்து 2-ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ள ஓம் பிர்லா கடந்த 4 ஆண்டுகளாக கோட்டா வில் நிகழும் மாணவர்கள் தற் கொலை விவகாரத்தை கண்டு கொள்வது கிடையாது. மாண வர்கள் மரணம் தொடர்பாக ஒரு முறை கூட சம்பவம் இடத்திற்கு சென்று ஆறுதல் கூறியதும் கிடையாது.
தற்கொலை சம்ப வங்களை தடுக்க நடவடிக்கை தொடர்பாக சாதாரண கருத்து கணைகளை கூட வீசியது கிடை யாது. செய்தியாளர்கள் சந்திப் பில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம்,”மாணவர்கள் தைரிய மாக இருக்க வேண்டும்” என விளம்பர நிகழ்ச்சியில் பேசுவது போல பேசிவிட்டுச் சென்றார். அவ்வளவு தான். அதன்பிறகு கோட்டா மாணவர்கள் மரணங் கள் பற்றி வாய்திறக்கவில்லை. கிட்டத்தட்ட தனது தொகுதியின் முக்கிய சம்பவமாக உள்ள மாணவர்களின் தற்கொலை விவகாரத்தை கண்டு ஓடி ஒளிந்து வருகிறார் ஓம் பிர்லா என்பது குறிப்பிடத்தக்கது.